Monday, March 23, 2009

மிருகவதை மனித வதை- வருண்காந்தி யார் பிள்ளை?


உத்தரப்பிரதேசமாநிலம் பிலிபிட் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக ¨ßjRlThÓs[ YÚi Lôk§, úRoRp ©WNôWd áhPj§p úTÑmúTôÕ Øv#mLÞdÏ G§Wô] LÚjûR ùR¬®jRRôL TWYXôL ×Lôo GÝkÕ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலபல அரசியல் நெருக்குதல்களால் (அவருடைய கருத்து) தேர்தல் ஆணையமும் வருண் காந்தியை பா.ஜ.கட்சி சார்பில் போட்டியில் நிறுத்துவதைத் தவிர்க்கும் படி அக்கட்சிக்கு ஆலோசனை கூறியுள்ளது.

பா.ஜ.கட்சித்தலைகளெல்லாம் ஒன்று கூடி அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வம்படியாக அறிவித்து இந்தியா இந்துப்பயங்கரவாதிகளுக்கு மட்டுமே சொந்தமென்று மீண்டும் நிரூபித்துள்ளனர்.

இதே பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேனகா காந்தி மிருக வதைக்கெதிராக மிகப்பெரிய போராட்டத்தை எடுத்திருந்தார் அவர் அமைச்சராய் இருந்தபோது.. எமர்ஜென்ஸிக்காலத்தின் போது தன் கணவர் சஞ்சே காந்தியால் எடுக்கப்பட்ட உயிர் வதைகளுக்கு எதிரான பிராயச்சித்தமாக அவர் அதைக்கருதியிருக்கக் கூடும். சஞ்சேயின் அகால மரணமும் தெய்வம் நின்றறுக்கும் என்ற பொன்மொழியும் அறிந்ததனால் கூட தன் வம்சத்தைக்காக்கும் பணியாக மேனகா காந்தி காட்டில் வாழ்ந்த விலங்களுக்கு பாதுகாப்பை வலியுறித்தியிருக்கக் கூடும்.

இதே நேரம் அகன்ற பாரதக்கனவைக் கட்டி மேய்க்க வந்த மூப்பர் ராஜீவ் காந்தியோ ஈழத்தில் காலூன்ற போட்ட சோத்துப்பருக்கைகள் செரிக்குமுன்னரே அவர்களைக்கொன்று போட்ட வரலாற்றின் நாயகனானார்.

சந்தண மாலைகள் போட்ட கரங்களின் வாசனை போகுமுன்னரே பாரத டாங்கிகளின் செயின் புளொக்குகளில் உடைலைச் சிதைத்து உயிரை விட்டனர் அவ்வப்பாவி மக்கள். பூரண கும்பம் வைத்து வணங்கி வரவேற்ற கரங்கள் இறங்குமுன்னரே சிரங்கள் கழுத்திலிருந்து இறங்கி சிதறி உயிரை விட்டனர் அவ்வேதிலி மக்கள்.

இந்திய எமேர்ஜென்ஸிக்காலத்தில் சஞ்ஜே சிதறுண்டுபோனது போல் ஈழத்தின் எமேர்ஜென்ஸியில் மேய்ப்பரும் உடல் சிதறிப்போனார்.

மேய்ப்பர் உழுத வயல் வெளிகள் அகன்ற பாரதக்கனவுகளின் எல்லைகளை இன்று வன்னியின் தொலைவு வரை நீட்டிக்கொண்டிருக்கின்றது.

அதே சந்தண மாலை போட்ட மக்களும் கும்பம் வைத்து வரவேற்ற மக்களும் இப்போதும் தம் இரத்தத்தைப் பாச்சி வன்னிக்காடுகளை வள்மாக்குகின்றார்கள். காடுகளில் வாழ்ந்த விலங்குகளைக்காத்த எந்தக் கருணையும் காடுகளில் உரமாகும் மனிதர்களைக்காக்க வரவேயில்லை.

இதே நேரம் வருண் காந்தியின் மீது மற்றுமொரு பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


//வருண் காந்தி இஸ்லாமியர்களையும், சீக்கியர்களையும் இழிவுபடுத்திப் பேசியதாக இன்னொரு புகார் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது. இந்தப் புகாரையும், முதல் புகாரைக் கொடுத்த பிலிபித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சிங்கே கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள சிடியில், இந்த தொகுதியில் ஒரு பைத்தியக்கார சீக்கியர் (வி.எம்.சிங்) போட்டியிடுகிறார். அவர் ஒரு முஸ்லிம் ஏஜெண்ட். அவரை ஆதரிக்கும் இந்துக்கள், இந்து மதத்தின் மாபெரும் துரோகிகள்.

இதுபோல், ரியாஸ் அகமது என்பவரும் போட்டியிடுகிறார். அவர் அப்பட்டமான பாகிஸ்தானி. இத்தகையவர்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்துவிட வேண்டும்.

எனக்கு முஸ்லிம்களின் ஓட்டு தேவையில்லை. இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். இந்துக்கள் ஓட்டு போடாமல் இருப்பது, மதத்துக்கு துரோகம் செய்வது போன்றது. இந்து ராணுவத்தை அமைத்து, துப்பாக்கி உரிமம் கொடுப்பேன் என்று பேசியுள்ளாராம் வருண் காந்தி. //

மனிதர்களை வதைக்கும் பண்பு பரம்பரை ஜீன் கடத்தலாய் இருக்கக் கூடும். பாவம் அவர் தான் என்ன செய்வார்.

இதே நேரம் சோனியா காந்தி "TVeLWYôRjûR Lôe¡Wv Lh£Vôp UhÓúU A¥úVôÓ J¯dL Ø¥Ùm'"UdL[ûYj úRoRûXùVôh¥ LoSôPL Lôe¡Wv Lh£«u úRoRp ©WNôWjûR §eLs¡ZûU RôYQùLúW«p ùRôPe¡ûYjதபோது அவர் இவ்வாறு á±யுள்ளார்.


திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர் கூறுவதில் உண்டு. பயங்கரவாதத்தை உருவாக்குபவர்கள் தானே அதை நிறுத்தவும் ஒழிக்கவும் முடியும்.

வருண் காந்தியின் இந்தப் பேச்சிற்கு மேய்ப்பரின் புதல்வி ப்ரியங்கா இவ்வாறு அறிவுரை கூறியுள்ளார்.
"TLYj ¸ûRûV Øû\VôLl T¥jÕ ×¬kÕ ùLôiÓ ©\Ï ùTôÕdáhPeL°p úTNÜm Guß YÚi Lôk§dÏ ©¬VeLô A±ÜûW á±Ùs[ôo."

இன்றைய ஈழத்தின் அவலத்திற்கு இராஜீவ்வின் மரணமே காரணம் எனக்கூறிக்கொள்பவர்கள் காரியமாற்றுபவர்கள் பகவத் கீதையின் இந்த வாசகத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே"

தன் கடமையைச் செய்த தனுவைப் போல பல தனுக்களை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்.

இப்போ சொல்லுங்கள் வருண் காந்தி யார் பிள்ளை?

1 comment:

ttpian said...

தெரியுமா?
சுமார் 30 வருடன்கலுக்கு முன்பு,ஒரு பென் வெறும் உடம்பில் ஒரு டவல் சுட்றி இருப்பார்:அதில் 40% தள்ளுபடி என்று விளம்பரம் எழுதி இருக்கும்:அது வேறு யாறுமில்லை....வருன் காந்தியின் ஆத்தா-

Post a Comment