
உலகத் தமிழர்களின் தலைவர் தானைத்தலைவர் தமிழால் தமிழுணர்வால் தமிழகம் கடந்தும் வாழும் தமிழ் நெஞ்சங்களில் அரியணை போட்டு உடகார்ந்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட ஏற்றங் கொண்ட முதல்வரின் உள்ளத்தில் இத்தகைய நச்சினை விதைத்தவர் யார் என்பதைத் தமிழுலகம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஏன்? ஏன்? என்ற கேள்விக்கு இத்தனை கீழ்த்தரமான முறையில் தேர்தல் கால விளம்பரம் பெற்றுக்கொள்ளும் அளவில் தாழ்ந்து போக முடியுமா? வேண்டுமா? என்ற வினாவைத் தொடுத்திருக்கின்றது இந்தச் செய்தி.
//3-4-2009 அன்று முதல்-அமைச்சரின் கோபாலபுர இல்ல முகவரியில் பெறப்பட்ட கடிதம் ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சின்னம் அச்சடிக்கப்பட்ட தாளில் அவரது உயிருக்கு அச்சுறுத்தி மிரட்டல் விடப்பட்டு உள்ளது. //
இன ஒடுக்கு முறையை அரசியல் ரீதியாக அகிம்சை ரீதியாக முகங்கொடுத்தும் தீர்க்க முடியாது போன பின்னரே ஆயுத ரீதியான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். அவர்கள் ஆயுதத்தின் மீது காதல் கொண்டவர்களோ கொலை செய்வதைதொழிலாகக் கொண்டவர்களோ அல்ல. சுதந்திர உணர்வும் தன்மான உணர்வும் (தமிழகத்தையும் விட) மீதூரப்பெற்றவர்கள்.
தங்கள் யுத்தத்தை தங்களின் மனவலிமை கொண்டு முன்னெடுத்தவர்கள். தங்களின் வளங்களை தங்கள் மக்களை நம்பி முன்னெடுத்தவர்கள். இன்றும் அதனையே செய்து கொண்டிருப்பவர்கள். இந்தியா முதல் எத்தனையோ நாடுகளின் நேரடி மறைமுக சூழ்ச்சிகளையும் ஆயுத உதவிகளையும் எதிர்த்துப்போராடுபவர்கள்.
இடையில் இந்தியச் சூழ்ச்சியில் தடம் மாறி துயர்பட்டு மீண்டு வந்தவர்கள். இந்தியாவின் கள்ளம் உணர்ந்து விலகிநிற்பவர்கள். இந்தியாவிடம் எதற்காகவும் கையேந்துவதை இன்று வெறுப்பவர்கள். இந்தியா எதிரியாக வந்தாலும் தயங்காது எதிர்த்துப் போராடக்கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்கள். சுதந்திர தாகம் கொண்டவர்களேயன்றி சுயநல அரசியல் செய்பவர்கள் அல்ல.
இது தான் யதார்த்தம் .இது தான் உண்மை . அன்று சில தமிழக அரசியல் வாதிகள் கொடுத்த சில நூறு இலட்சம் ரூபாய்களைத் தவிர தாய்த்தமிழகம் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் இருந்து தார்மீக உணர்வைத்தவிர வேறு எதையும் இம்மாபெரும் போராட்டம் பெற்றுக்கொள்ளவும் இல்லை. கேட்டதும் இல்லை.
உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் தமிழீழ உறவுகளின் 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதப் போராட்டத்தில் எத்தனை மில்லியன் ரூபாய்கள் ஆயுதமாகவும் எத்தனை இலட்சம் மனித உயிர்கள் பலியாகவும் எத்தனை கோடி கோடி மனித உழைப்புகள் ஆகுதியாகக் கொட்டப்பட்டிருக்கும் இப்போராட்டத்தில் தாய்த்தமிழகத்தின் பங்களிப்பு எத்தனை சத விகிதம்? எத்தனை மில்லியன் ரூபாய்கள் தாய்த்தமிழக மக்களிடம் இருந்து வந்தது? எத்தனை வீத மனித உழைப்பு கொட்டப்பட்டது?
பதில் உங்களுக்கே தெரியும். பல கோடிகளைக்கொட்டி உருவாக்கப்படும் புனித கோவிலில் சில சில்லறைகளை வீசி எறிந்த தமிழக அரசியல்வாதிகளும் உறவுகளும் வாய் கிழியக் கதைப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை.
உதவி செய்யவேண்டுமென்பது என்ன தேவை? என்று சிலர் முணுமுணுக்கக் கூடும். அப்படி எந்தத் தேவையும் இல்லை. அதே போல ஈழப்பிரச்சினையில் கருத்துச் சொல்வதற்கோ அடாவடி செய்வதற்கோ கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பொங்கி எழுந்த பொது மக்களின் தார்மீக ஆதரவைக்கூட மனிதச்சங்கிலியென்றும் இராஜிநாமா என்றும் நீர்த்துப்போக வைத்த அரசியல் அராஜகங்களை நாம் அறிவோம்.
ஈழத்தமிழர் ஆதரவாக எழுந்த உணர்வினை அரசியல் வாக்காக மாற்ற கருணாநிதி எடுக்கும் குயுக்தி மிக்க தந்திரம் என்பதற்கப்பால் இதை நாம் பெரிதாக ஒன்றும் பார்க்கவில்லை. ஜெயலலிதாவும் இதே போல ஒரு காகித நாடகம் போட்டது இப்போது நினைவிற்கு வருகின்றது. குள்ள நரித்தந்திரத்தில் தமிழக அரசியல்வாதிகளை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது.
அதே அரசியல்வாதிகளைத் " தலைவா "என்று கொண்டாடுவதிலும் அடிக்கும் கொள்ளையை ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து அவர்களைத் தெரிவு செய்வதிலும் சிந்தனையற்ற முட்டாள்தனம்மிக்க விடாக்கண்டன் கொடாக்கண்டன் போல் செயல் செய்வதில் தமிழக மக்களை விஞ்சுவார் யாருமில்லை இவ்வுலகத்தில்.
வட இந்தியர்களாலும் சிங்களவர்களாலும் "கோமாளி" மாநிலம் என்று அழைக்கப்படும் நிலைக்கு தமிழகத்தைக்கொண்டு வந்தது யார் என்பதை மனச்சாட்சியுள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சிங்கங்களை(சிங்களவன) எதிர்த்துத்தான் புலிகள் போராடுகின்றார்கள். நாங்கள் வரப்போகின்ற 22 ஆம் நூற்றாண்டு பற்றிக்கனவு கண்டு கொண்டிருக்கின்றோம். சுதந்திர ஈழத்தின் உருவாக்கம் பற்றி திட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கின்றோம்.
கோமாளிக்கூத்துகள் ஆடுவதற்கு எங்களுக்கு நேரமில்லை. உண்ட சோறு செரிப்பதற்கு ஊதாரித்தனமாக வார்த்தைகளை கொட்டுபவர்கள் அல்ல நாங்கள்.
எலிகளைப்பிடிப்பது புலிகள் (தமிழ் ஈழ மக்கள்) வேலையல்ல.அதற்கு எங்களிடம் மலம் தின்னும் காகங்கள் (ஆனந்தசங்கரி ,டக்ளஸ்,கருணா) உண்டு.