Saturday, February 28, 2009

பயங்கரவாதம்: புஷ்ஷின் பொய் முகம்


பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற புஷ்ஷின் பொய் முகம் இன்று உலகெங்கும் வன்முறைகளைக்கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. ஏகாதிபத்திய எதேச்சாதிகார வன்கொடுமைகளை உலக மக்களின் இரத்தங்களால் எழுதிச் செல்கின்றது. ஆப்கானிஸ்தான் ஈராக் என்று எடுத்துச்செல்லப்பட்ட யுத்தம் இன்று தடம் மாறி அடக்கு முறை அரசுகளின் கைகளில் இன மொழிக் குழும மக்களின் விடுதலை வேட்கையை அடக்கும் மந்திரக் கோலாக நிறம் மாறியிருப்பதே மனித விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ஈராக் தொடர்பான அமெரிக்க அரசின் அணுகு முறை அதன் இருப்பை மையப்படுத்திய அரசியல் என்பதும் பெற்றோல் வணிகத்திற்கும் பச்சை டாலர் பரிவர்த்தனைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொகுப்பு என்பதுவும் விசயமறிந்தவர்கள் தெரிந்து கொண்டது தான்.

ஆனால் அதனை தன் கையகப்படுத்த அமெரிக்கா எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் இன்று மனித நாகரீகத்தின் பெருமையையே எள்ளிக் கேலி செய்து நகையாடிக்கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவினதும் அதன் அரசியலையும் கடந்தும் இந்து சமுத்திரத்தின் ஒரு ஓரத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் உயிர் நாடியைக் குதறிப்போடுவதை யாரால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.

பெரியண்ணன் தவறிவிட்ட ஒரு கணத்தில் வனாந்திரத்தில் நரமாமிச வேட்கையுடன் திரிந்து கொண்டிருந்த ஓநாய்களும் கழுகுகளும் நரிகளும் நல்வேசம் போட்டுக்கொண்டதும் அதைக்கண்டும் காணாது விட்ட அமெரிக்க அரசும் பொய் வேடம் போட்ட புஷ்ஷுமே தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் குதறிக்கொண்டிருக்கும் சிங்களமும் நாட்டாமை கனவில் வேஷம் போடும் இந்தியாவும் பயங்கர வாதத்திற்கு எதிரான முகமூடி போட்டுக் கொண்டு பயங்கரவாதத்தில் ஊறிக்கொண்டிருப்பதற்கும் அப்பாவிமக்களின் இரத்தம் குடித்துக் கொண்டிருப்பதற்கும் அமெரிக்காவே தக்க பதில் கூறவேண்டும்.

காஷ்மீர் இமாச்சல் பிரதேசம் நாகாலாந்து என்று தன் சொந்த மக்களையே பயங்கரவாதிகளாகப் பாவித்து கொன்று குவிக்கும் இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிரான பங்காளி. இதே போன்றே அன்றைய புஷ்ஷின் ஆட்சியில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஷ்தான் இன்று ஒபாமாவின் பார்வையில் பயங்கரவாதத்தை விதைக்கும் அச்சாணி நாடு. இதே போல நாளை இந்தியாவும் சிங்களச் சிறீலங்காவும் கூண்டிலேறும் நாள் வராமல் போகாது.

இன்று வன்னியில் ஓடும் இரத்த ஆறு ஒன்றும் வீணாகிப்போக மாட்டாது. புஷ்ஷின் எண்ணை வளத்தை அள்ளிக்கொள்ளும் ஆசை ஈராக்கில் மட்டுமின்றி உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இரத்தச்சேற்றை அள்ளித் தெறித்ததால் இன்று உலகம் துயரத்தில் மூழ்கிப்போயிருக்கின்றது.

கொடுங்கோலர்களின் ஆட்சிகள் என்றும் நிலைத்திருந்ததற்கான வரலாறு சரித்திரத்தில் இடம் பெற்றதேயில்லை.

மாபெரும் கிரேக்க ரோமானிய சாம்ராஜ்யங்களும் உலகை ஆள வெளிக்கிட்ட ஹிற்லரும் இன்று போன இடம் தெரியவில்லை என்பதே உண்மை.

அமெரிக்க மக்களின் மனச்சாட்சியும் ஆளும் வர்க்கத்தின் ஞானக்கன்ணும் விழித்துக் கொள்ளாவிட்டால் அமெரிக்காவும் அவ்வாறே ஆகும். அமெரிக்காவே அவ்வாறு ஆகும் போது அள்ளித்தெளித்த அவசரக்கோலத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்தியா எம்மாத்திரம். இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதே சரித்திரம். பல நாடுகளை இராணுவப்பலத்தால் கட்டிப்போட்ட ஒரு அமைப்பு என்பது மட்டுமே உண்மை. தமிழகமே மூன்று பேரரசுகளுடனும் பல சிற்றரசுகளுடனும் ஆளப்பட்டு வந்த பூமி. அதுதான் அம்மண்ணின் நீண்ட கால சரித்திரமும்.

மக்களை அதிகாரமும் இராணுவ பலமும் நிரந்தரமாக இணைத்து வைத்ததாகச் சரித்திரமே இருந்ததில்லை. அதற்கு சிதறிப்போன சோவியத் யூனியனே உதாரணம்.

ரெக்ஸாஸின் கெளபோயின் குதிரை விளையாட்டுகள் இன்று உலக ஒழுங்கில் புதிய மாற்றத்தை வேண்டி நிற்கின்றன.

அகன்ற சோவியத் சோஷலிசக்குடியரசின் ஒழுங்கீனத்தை ஒழுங்கு படுத்த ஒரு மிகைல் கோர்பச்சோவ்வும் ஒரு பெரிஸ்திரோய்க்காவும் தேவைப்பட்டது போல அமெரிக்காவின் இரத்தம் குடிக்கும் நடை முறைகளையும் அதற்கான போர் முகத்தை திருத்தி எடுக்கவும் ஒரு ஒபாமா தேவைப் பட்டிருக்கலாம். எதையும் விடாது எழுதிச் செல்லும் விதியின் வலிய கரங்கள் இதையும் எழுதிச் செல்லும்.

அவ்வாறு நிகழும் ஒரு பொழுதில் இன்று வன்னிக்காடுகள் குடித்துச் செழிக்கும் இரத்தமும் வேர்களால் உறிஞ்சிச் சுவைக்கும் மனித நிணமும் குண்டுகள் விதைத்த தனி மனித ஆணவங்களையும் கானல் நீராகும் வல்லரசுக்கனவுகளையும் கால்களில்ப் போட்டுக் கேள்விகள் கேட்கும்.

மனிதம் வாழ்ந்ததுவும் வாழ்வதுவும் நிலையானது என்றால் மனித வாழ்வுக்கு ஒவ்வாததுவும் எதிரானவையும் எப்போதும் தூக்கி எறியப்பட்டே வந்திருக்கின்றன என்பதுவே இயற்கையின் நிலைப்பாடாகும்.

இவை நீங்கள் நம்பும் மெய்ஞானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் அகப்படாது விட்டாலும் அதுவே இயற்கையின் நியதி.

எனவே போராடும் தமிழ் மக்களே ! பயங்காட்டும் படங்களை கருத்தில்க்கொள்ளாது எதிர்ப்படும் தடைகளை மோதி மிதித்துச் செல்லுங்கள் . அதுவே இயற்கையின் விதி. அதையே இயற்கையும் வேண்டி நிற்கின்றது.

தமிழ்க்களவாணிகள்




தமிழீழத்தில் பெருகி ஓடும் இரத்த ஆற்றிலும் கொட்டிக்கிடக்கும் நிணங்களிலும் தசைகளிலும் "அரசியல்" செய்யும் களவாணித்தனம் இன்று தமிழ் நாட்டில் மிகுந்து காணப்படுகின்றது.

உண்மையாகவே பொங்கிக் கொதிநிலையடைந்திருந்த ஈழத்தமிழர் மீதான தமிழக மக்கள் ஆதரவை தங்கள் தேவைகள் நிறைவேற்றத்திற்காக வேண்டியே தூண்டிவிடுவதும் நீர்த்துப்போகச் செய்வதும் நடந்துகொண்டிருக்கின்றது. தங்கள் ஆட்சி அதிகாரம் பதவி என்பவற்றையே எல்லைக்கோடுகளாக வைத்து தமிழகக் கட்சிகளும் தலைவர்களும் இக்களவாணித்தனத்தில் மக்களின் முனைப்புகளை மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்கள் அரசியல் நலனென்ற சித்து விளையாட்டிற்கும் அப்பால் களங்களை விரித்துச் செல்ல மறுதலிக்கின்றார்கள். ஆளும் தி.மு.க ஆகட்டும் எதிரணி அ.தி.மு.க ஆகட்டும் மத்திய அரசின் கிளைத்தமிழ்க்காங்கிரஸ் ஆகட்டும் மற்றும் உதிரிக்கட்சிகளான ம.தி.மு.க...பா.ம.க நடிகர்களின் கட்சிகளாகட்டும் தமிழினப்பாதுகாப்புக் கட்சிகளாகட்டும் எல்லோரின் எதிர்பார்ப்பும் தமிழக மக்களின் வாக்கு வங்கிகளின் மீதான காதலே தவிர சாகும் மக்களின் வேதனையைப்போக்கும் மனச்சுத்தியுடனான செயல்பாடு இல்லை என்பதே உண்மை.

தமிழகக் கட்சிகளை விமரிசனம் செய்வதற்கான தார்மீகப் பலத்தை தந்தது அவர்கள் போடும் ஈழத்தமிழ் ஆதரவுக்கோஷமும் வாக்கு வங்கி அரசியலைக்கடந்துபோகா அவர்களின் இரட்டை நிலை நடிப்பும் தான். மற்றவர் அரசியலைக்குறை சொல்வதும் ராஜினாமாவைக்கோருவதும் உரத்துச் சத்தமிடுவதும் தமது தவறுகளை மூடி மறைக்கவும் தங்கள் பலவீனங்களைப் பலங்களாகக் காண்பிக்கவும் மட்டுமேயன்றி நேர்மையான செயற்பாடுகளினால் அல்ல.

புலியெதிர்ப்பு என்ற போர்வையில் சில கட்சிகள் மக்கள் கொலைகளை நியாயப்படுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமென்றால் இந்தியத் தேசியம் பேசி ஒரு மக்களின் இறப்பைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விடுவது அதை விட அயோக்கியத்தனம் என்பேன்.

இவ்வகையான இரட்டை வேட அரசியலே இன்று கொலைகளுக்குள் செத்துச் செத்து வாழும் மக்களை அழிக்க இராணுவ உபகரணங்களை மேலும் மேலும் கொடுக்கும் துணிச்சலை இந்திய காங்கிரஸ் அரசிற்கு கொடுத்திருக்கின்றது.

தன்னிச்சையாகத் துடித்தெழும் தமிழக மக்களின் உணர்வுகளையும் அரசியல் சாயம் பூசி கட்சி உணர்வாகக் கூறு போடுவதைத் தவிர இவை என்ன சாதித்து விட்டன.

அன்று நடந்த தமிழக மக்களின் போராட்டத்தினதும் எழுச்சியினதும் உணர்வலைகள் உணவுப்பார்சல்கள் என்ற அளவில் தன்னும் இந்திய மத்திய அரசை உதவிகளை செய்யத்தூண்டியது. ஆனால் இன்றோ... உலுத்துப்போன அரசியல் கபடம் தமிழன் நெஞ்சில் ஓங்கி மிதிக்கும் வக்கிரத்தை மத்திய அரசிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

இத்தனை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை மீறி ஒரு மத்திய அரசு மு்டிவெடுக்கின்றது என்றால் அதற்கு வழி வகை செய்தது யார் தவறு?

செத்து மடியும் ஈழத் தமிழ் மக்களுக்கு இதற்கு மேலும் என்ன நன்மையை நீங்கள் செய்து விடப்போகின்றீர்கள்?

வழிகாட்ட வக்கில்லாத் தலைவர்களைக் கொண்டுள்ளோம் என்ற வேதனையில் தமிழகத்தில் எரிந்து விழும் முத்துக்குமரன்களின் சாம்பல்மேடுகளை என்ன செய்து விடப்போகின்றீர்கள்?

தமிழின உணர்வு கட்சிகளையும் தாண்டியது என்பதைப்புரிந்து கொண்டு மக்களை எப்போது கட்டவிழ்த்து விடப்போகின்றீர்கள்?

மூவேந்தரின் இராஜியத்தில் கட்டுண்டு சாதனைகள் படைத்த தமிழினத்தை நரம்பில்லா நாவேந்தரின் கூட்டுச் சதியில் முடக்கி அழிப்பது எந்த விதத்தில் நியாயமானது.

பொங்குகின்ற தமிழினத்தின் புது வெள்ளத்தை புனலில் பிடிக்கும் முட்டாள்தனத்தைக் கைவிடுங்கள். கட்டவிழ்க்கும் காட்டாற்று வெள்ளத்தை மறைக்கும் அணைகளாக அன்றி முடிந்தால் காப்பாற்றும் கரைகளாக இருங்கள் என்பதே இந்த தமிழ்க்களவாணிகள் முன்னால் வைக்கப்படும் தமிழக மக்களின் கோரிக்கை ஆகும்.

புலிகளும் எலிகளும்


தமிழின அழிப்பினைச் சிங்களப்பேரினவாதம் மூர்க்கமாகக் கைக்கொண்டிருக்கும் இவ்வேளையில் புலம் பெயர்தேசத்து தேசாந்திரிகளிடம் பெரும் சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

புலிகளின் இறுதி எட்டிவிட்டது போன்றும் அல்லது அவ்வாறு எட்டுவதற்கு முன்னால் அவர்கள் செய்யவேண்டியன செய்யக்கூடாதன என்பவை பற்றியெல்லாம் அனல்பறக்க இத்தேசாந்திரிகள் தங்கள் வலைத்தளங்களில் எழுதித்தள்ளுகின்றார்கள்.

இத்தேசாந்திரிகளின் தராதரம் என்ன ?அரசியல் பின்னணி என்ன ? என்பது போன்ற பல விமர்சனங்கள் எழுகின்றபோதும் அவற்றைப்புறந்தள்ளி அவர்கள் வைக்கின்ற விமர்சனங்கள் தீர்வுகள் பற்றி முதலில்ப்பார்ப்போம்.

இதன் காரணமாகவே புலிகளினதும் அவர்கள் ஆதரவாளர்களினதும் சர்வதேச நடைமுறைகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததே.

இது இவ்வாறிருக்க ,

இத்தேசாந்திரிகள் புலிகளின் சரணடைதல் நிபந்தனையுடன் கூடியதானதாக இருந்தால் எவ்வாறு இருக்கவேண்டும் அல்லது நிபந்தனையற்றதாக இருந்தால் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தரம் பிரிக்கின்றார்கள்.

இவர்களின் நிபந்தனை வன்னியில் புலிகளால் "தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை" மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. சிங்கள ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் இதேயளவான அல்லது இதற்கும் மேலான துன்பத்திலும் துயரத்திலும் கைதுகளுக்கும் படுகொலைகளுக்கும் ம்த்தியிலும் வாழும் மக்கள் பற்றி இவர்கள் அக்கறைப்படவே இல்லை.

மக்கள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற முடிவிற்கு இவர்கள் எவ்வாறு வந்தார்கள் என்பது ஒரு புறமிருக்க மக்களின் ஆதரவுப் பலமில்லாது புலிகளால் இத்தனை காலமும் எவ்வாறு விடுவிக்கப்பட்ட (புலிகளால்) பிரதேசத்தில் ஆட்சி செய்ய முடிந்தது என்ற கேள்விக்கும் இவர்கள் தான் பதில் கூறவேண்டும்.

இந்திய அமைதிப்படைக்காலத்தில் மக்கள் பலத்தை வென்றெடுக்க முடியாது போனதன் காரணத்தாலேயே கப்பலேறிப்போன "டம்மி" தமிழ் அரசாங்கத்தையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

இவர்களின் மக்கள் மீதான இத்திடீர் கரிசனை இந்திய ஆளும் வர்க்கத்தின் குரலாக ஒலிக்கின்றதோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது. "புலிகள் ஆயுதங்களைப்போட்டு விட்டு சரணடையவேண்டும்.மக்களைப்பாதுகாப்பாக வெளியேற்றத்தயாராக இருக்கின்றோம்" என்பது இப்போது இந்திய ஆளும் வர்க்க அரசியல் மேடையில் ஒலித்துக்கொண்டிருக்கும் சில வசனங்கள் ஆகும்.

இன்றைய வன்னிப்போரை தம் அரசியல் பொருளாதார நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு நடாத்திக்கொண்டிருக்கும் இந்திய ஆளும் வர்க்கம் திடீரென்று சமாதான தேவதை வேஷம் போடுவது சுத்த கபடத்தனம். இக்கபடத்தனத்தில் நமது புலம் பெயர் தேசத்து தேசாந்திரிகளும் சிக்கிக்கொண்டார்களோ என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இவர்கள் கூறுவதைப்போலவே புலிகள் நிபந்தனையுடன் அல்லது நிபந்தனையில்லாது சரணடைந்து விட்டால் அடுத்தது என்ன..? இக்கேள்விக்கான பதில் இவர்களுக்கே இது வரை தெரிந்திருக்கவில்லை.

சரி இவர்கள் கூறுவதைப்போலவே மக்களை அழிக்கும் இவ் யுத்தத்தில் புலிகளைப்போலவே ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சிங்கள பேரினவாத அரசிற்கு இவர்கள் வைக்கும் நிபந்தனை என்ன? அல்லது சிங்கள அரசினால் இவர்கள் பெற்ற உத்தரவாதங்கள் தான் என்ன?

ஆயுதப்போராட்டத்திற்கு தமிழ் மக்களைக்கொண்டு வந்த அரசியல் அனுபவக்காரணங்களை நாம் அனைவரும் அறிவோம். அஹிம்சைப்போராட்டத்தில் ஈடுபட்டு ( 1948 இல் இருந்து) தோல்வியடைந்த அரசியல் பாராளுமன்றக் கட்சி அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் தனித்தமிழீழமும் ஆயுதப்போராட்டமும். இதில் புலிகளின் ஆசைகளோ முடிவுகளோ அல்லது தவறுகளோ எங்கும் கிடையாது. தொடர்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற காலத்தின் கரங்களாகத் தான் அவர்கள் இருந்தார்கள்.

இன்று புலம்பெயர் தேசத்தில் "சொரியலாக" தேசாந்திரிகளாக இயங்கும் நீங்கள் கூட தனித்தமிழீழத்தையும் ஆயுதப்போராட்டத்தையும் ஏற்றுக்கொண்டு இயக்கங்களில்ப்போராடியவர்களாக இருக்கக்கூடும். புலிகளை வெறுப்பதற்கு சகோதரப் படுகொலைகளை முதன்மைக் காரணிகளாகத் தூக்கிப்பிடிக்கும் நீங்கள் உங்கள் இயக்கங்களில் இடம் பெற்ற உட்படுகொலைகளை ஏன் நினைத்துப்பார்ப்பதில்லை.

தமிழ் மக்களைப்பொறுத்தளவில் நீங்களும் புலிகளைப்போலவே இரத்தம் படிந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்களே. நீங்கள் ஒன்றும் அவர்களை விட மேன்மையானவர்களும் அல்ல அதேபோல அவர்களைவிடவும் தாழ்ந்து போனவர்களும் அல்ல.

உங்களுக்கு நீங்களே "தூய்மை" வேஷம் போடுவதை விட்டுவிட்டு தமிழ் மக்களின் அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைப் பற்றிப் பேசுங்கள். புலிகள் தங்களை சுயவிமர்சனம் செய்யவேண்டியதை வலியுறுத்தும் நீங்களும் உங்களைச் சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள்.

அற்ப சுயலாபங்களுக்காக சிங்கள ஏகாதிபத்தியத்தின் காலடியை நக்கி தமிழ் மக்களுக்கு வரலாற்றுத் துரோகம் செய்யும் உங்கள் நண்பர்களை விமரிசனம் செய்யுங்கள். தமிழினத்தின் எழுச்சியை நசுக்க நினைக்கும் ஏகாதிபத்தியங்களின் விபரீத ஆசைக்கு நீங்களும் துணைபோகாதீர்கள்.

புலிகளின் பாசிசம் பற்றியே எப்போதும் புலம்பும் நீங்கள் உங்கள் போராட்ட நடைமுறையும் வழிகளும் எவ்வாறு ஏன் தோற்றுப்போனது என்பதை எப்போதாவது நினைத்துப்பார்த்ததுண்டா? உங்களுக்கு இருக்கக் கூடிய பொறுப்பை மறைத்து புலிகளின் பாசிசம் என்ற ஒற்றைச் சொல்லால் மறுதலீப்பீர்களேயானால் உங்களையும் ஒரு காலத்தில் பாதுகாத்து அரவணைத்த தமிழ் மக்களிடம் இருந்து மீண்டும் மீண்டும் அன்னியப்பட்டுப்போகின்றீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

மக்கள் இல்லாப்போராட்டம் மண்ணுக்குச் சமம் என்று நீங்கள் கூறும் கூற்றுக்கு நீங்களே உதாரணம் ஆகாதீர்கள். அதே போல புலிகளின் பினாமிகள் என்ற போர்வையில் புலம் பெயர் தேசங்களில் துன்பப்பட்ட மக்களை மேலும் துயரப்படுத்தியவர்களும் சர்வதேசத்தின் அனுதாபத்தையும் ஆதரவையும் வென்றெடுக்க வேண்டிய தார்மீகப்பொறுப்புகளை கொச்சைப்படுத்தி தமீழப்போராட்டம் இன்று பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படுவதற்கு வழி வகுத்தவர்களும் தங்களைத் திருத்திக்கொள்ளும் நேரம் இதுவே.

புலியெதிர்ப்பு புலியாதரவு என்பதற்குமப்பால் தமிழ் மக்களின் நலன் சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

Friday, February 27, 2009

புலியெதிர்ப்பு மாமாக்களுக்கு


புலிகளுக்கெதிரான சிங்களக்காடையர்களின் படயெடுப்பு எதிபாராத இடங்களிலெல்லாம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. புலியெதிர்ப்பு என்ற போர்வையில் தங்கள் காழ்ப்புக்களையும் அவதூறுகளையும் தேர்ந்த அரசியல் போல் போக்குக்காட்டி நடாத்தி வந்தவர்கள் முன்னால் எதிர்காலமே இருண்டுபோனது போன்ற பிரமை ஏற்பட்டிருக்கின்றது.

சிங்கள ஏகாதிபத்தியத்தின் தமிழின அழிப்பு முனைப்பெடுத்து நிற்கும் இவ்வேளையில் தமிழ் மக்களின் காப்பரணாக இருந்த புலிகள் பின்வாங்கிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இவர்கள் இதுவரை இருந்த கனவு லகத்தை விட்டு நிஜமாகவே தரையில் கால் பதித்திருக்கின்றனர்.

புலியெதிர்ப்பு என்ற கோசத்தை விட்டு வேறு எதுவித அரசியல் முனைப்புகளோ முன்னெடுப்புகளோ எதுவுமறியா இவர்களின் இருப்பே கேள்விக்குறியாகியிருக்கின்றது.

புலியெதிர்ப்பு அரசியல் பேசும் புலம்பெயர்தேசத்து தேசாந்திரிகள் ஆகட்டும் காட்டிக்கொடுப்புகளிலும் கூட்டிக்கொடுப்புகளிலும் சிங்களக்காடையர்களைக் குஷிப்படுத்தி அமைச்சுப்பதவிகளையும் டிங்கிரி நோனாக்களையும் கையகப்படுத்தியவர்கள் ஆகட்டும் அடுத்து என்ன என்ற கேள்விகளில் சிக்கி மூழ்கிப்போய் இருக்கின்றார்கள்.

பராக்கிரமம் நிறைந்தவர்களாயும் யாருமே நெருங்கவே முடியாதவர்களாயும் நிஜமாகவே நம்பியிருந்த புலிகளின் பின்னடைவு உண்மையிலேயே இவர்களை விக்கித்துப்போக வைத்திருக்கின்றது.

சிறுகச் சிறுக குழி பறித்து ஆயுள் வரை அமைச்சுக்கனவுடன் இருந்த டக்ளசின் கோபம் கருணாவின் மேல் திரும்பியிருக்கின்றது. தேவைக்கு மேல் விசுவாசம் காட்டி வன்னிக்காடுகளின் ஆழ அகலங்களைக்காட்டிக்கொடுத்த கருணாவின் மூளை வளர்ச்சி பற்றியும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

கொழும்பு அரசியலை மட்டுமே நம்பியிருந்த டக்ளசின் அரசியல், கிழக்கு மாகாண அரசியலை மட்டுமே நம்பியிருக்கும் கருணாவால் புரிந்து கொள்ள முடியாது தான். தனக்குக் கீழேயிருந்து தலையாட்டித்திரிந்த பிள்ளையான் கிழக்கின் முதலமைச்சராகி பிடித்த பிள்ளையார் கணக்கில் அசையாது இருக்கின்ற தோரணை கருணாவை அதிகம் சிந்திக்கவிடவேயில்லை.

சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளையாக தானுண்டு தன் துவக்குண்டு என ரெளடித் தோரணையுடன் திரிந்த கருணாவால் அரசியல் சதுரங்கத்தில் சிறு தூசியைக்கூட நகர்த்த முடியவில்லை என்பதே உண்மை.இல்லாவிட்டால் பிரித்தானிய விஜயமும் களிதின்ற கம்பியெண்ணலும் இல்லாமலே கிழக்கின் ஏகபோக நாட்டாமையாக அவரால் இருந்திருக்க முடியும்.

ஆளுக்குள்ள பலம் மூளைக்கில்லை என்பதைச்சரிவரப்புரிந்திருந்த ராஜபக்ஸ கோஷ்டியும் கிழக்குத் தலமையை பிள்ளையானிடம் நகர்த்தியிருந்தது. புலிகளிடம் இருந்து உண்மையாகவே வரக்கூடிய அச்சுறுத்தலைப் பூதாகாரமாகக் காட்டி கருணாவை விமானம் ஏற்றி விட்டிருந்தது.

போனமச்சான் திரும்பி வந்தான் என்ற கணக்கில் திரும்பியிருந்த கருணாவும் தன் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள உளறுவாயனாக மாறி விட்டிருந்தது தான் அனைத்து மாமாக்களின் செளகரியத்துக்கும் சாவு மணியடிக்கத்தொடங்கியிருக்கின்றது. புலிகளின் வீரத்தில் வைத்த நம்பிக்கையிலேயே இடையில் ரிவால்வருடன் திரிய மாமாக்களைச் சிங்களம் அனுமதித்திருந்தது.

புலிகள் இல்லாக் காலத்தில் மாமாக்களின் ரிவால்வர்கள் சிங்கள மக்களையே பலி கொள்ளும் என்பதையும் சிங்களம் உணர்ந்திருக்கின்றது. ரிவால்வர்கள் இல்லா மாமாக்கள் பல்லுப்போன பாம்புகளையும் விட கேவலமானவர்கள் என்பதை சாதாரண மக்களும் அறிந்திருக்கின்றார்கள் என்பது மட்டுமல்ல அந்த நன் நாளுக்காகவும் காத்துக்கொண்டிருக்கவும் செய்கின்றார்கள்.

இதையெல்லாம் புரிந்து வைத்திருக்கும் மாமாக்களே மக்களை விடவும் புலிகளின் மீட்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். புலியில்லா அரசியல் என்றால் தமிழரசுக்காலத்திலும் கூட்டணிக்காலத்திலும் பழம் தின்று கொட்டை போட்ட முதலைகளை எதிர்கொள்ள வேண்டுமென்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள்.துவக்குகளை நம்பி அரசியல் செய்தவர்கள் மூளை ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படி விசேடமானதில்லை என்பதுதான் எல்லோருக்கும் தெரிந்திருக்கின்றதே.

அதே போலப் புலம் பெயர் தேசங்களில் புலியெதிர்ப்புக்கொடி பிடிக்கும் தேசாந்திரிகளின் நிலமையும் கவலைக்கிடமாகிவிடும். இவர்களின் வெப்தளங்களும் புளொக்குகளும் படிப்பதற்கு நாதியில்லாது ஈயாடத் தொடங்கிவிடும்.

புலியெதிர்ப்புக்கருத்துடைய வாசகர்களை விட புலி ஆதரவுக்கருத்துள்ள வாசகர்களே இவர்கள் தளங்களை அதிகம் மொய்ப்பவர்கள். இவர்கள் போன்றவர்களின் சரவெடிகளைப் பார்த்தே தாங்கு தாக்கு நிலைகளை எடுப்பதே இவர்களின் மெத்தப்படித்த அரசியலாகும்.

தன்னை சுயமாக வளர்த்துக் கொள்ள முடியா கொள்கையாளர்களைப்புலம் பெயர் தேசங்களில் தங்கள் பிரதிநிதிகளாக வைத்துக் கொண்டதே புலிகளின் இன்றைய பின்னடைவிற்கு முதன்மைக்காரணமாகும்.

போராட்டத்தின் முஷ்டியை தங்கள் தோள்களை மட்டும் நம்பியிருந்ததும் காரணமாகும். மக்கள் போராட்டம் முஷ்டி பலத்திற்கும் அப்பால் இராஜதந்திர வெளிகளுக்கு நகர்த்தப்பட்டிருக்க வேண்டுமென்பதை அவர்கள் அறியாது போனது துர்பலமே.

அன்றைய அப்புஹாமி வகையறா மோட்டுச் சிங்களவனின் வாரிசுகள் இந்த வகையில் தமிழ்ப்புலிகளை விட புத்திசாலிகளே என்பது இன்றைய நடைமுறை நமக்குணர்த்தும் பாடமாகும்.

Thursday, February 26, 2009

காட்டுமிராண்டி காங்கி

தலைவனின் விதி முடிக்க வீணாய்ப்போன தமிழ்ச்சாதி காத்திருக்கின்றது என்பது தெரிந்திருந்தும் .. தவறிக்கூட கிட்ட வராது ஓடி ஒழிஞ்ச அத்தனை பேரும் இன்று மந்திரிகள்.

இத்தாலித்தோலில் இல்லாத மந்திரம் ஹைதரபாத் திராட்சைத்தோட்டத்தின் முந்திரித் தோலிற்கு இருந்த மாயத்தை இன்னும் ஜீரணிக்க ம்உடியாத துயரம் யாருக்கும் தெரியவில்லை.

அதனாலேயே இந்தியத் தலை மகனின் தமிழ் நாட்டு விஜங்கள் அவரின் சாவைப்போலவே மர்மமாய்ப் போனது. எப்போதும் போலவே விபச்சாரத் திராட்சையின் உதாசீனம் ஒரு தேசத்தின் தலையை கொய்து போட்டது.

இதக்கூடப் புரிந்து கொள்ளாத தர்மம் பத்தினி இராவண வதம் எடுக்க வன்னிக்காடுகளில் களமிறங்கியிருக்கின்றது.

இப்பதிவிரதாப்பத்தினியின் பதியைக் காலில் போட்டு மிதித்த விபச்சாரம் மனமாச்சரியம் அற்று தேர்தல் நெருக்கம் வேண்டி ஓலை அனுப்பிக்கொண்டிருக்கின்றது. கொலைகாரணம் தெரிந்த சு சாமியோ காங்கியின் நண்பன்.

பொய்யே பேசும் புழுத்தலையன்

களவாணிகளும் கள்வர்களும் ஒரு நாட்டை ஆண்டால் எப்படியிருக்கும்... வெரி சிம்பிள் இந்தியாவைப் போலிருக்கும் என்று நீங்கள் சொன்னால் உங்களுடன் என்னால் வாதிட முடியாது. ஆனால் தமிழ் நாட்டைப் போலிருக்காது என்று சொன்னால்....

அப்படியிருக்கும் என்று என்னால் ஆயிரத்து நூறு காரணத்தை சொல்ல முடியும்.
மு.க என்றால் முதல்வர் கருணாநிதி என்று தான்(முழுக் கள்வன் என்று பொறாமையில் சிலர் சொல்வதை நான் கருத்தில் எடுப்பதே இல்லை) நான் நினைக்கின்றேன். அத்தனை தடவைகள் அவரை முதல்வராய் இருத்தி சிறப்புப் பெற்றது தமிழகம்.

காங்கிரஸ் களவாணிகளுக்கு மாற்று என்ன என்று தமிழ்கம் திக்கித் திணறி தடுமாறியபோது தான் எங்கள் சொத்தை அண்ணா முடுக்கி விட்ட திருட்டு முள்ளைமாறிகள் கழகமாக கண்மணிகள் கூட்டுச் சேர்ந்து வந்தார்கள்.

தமிழறியாத் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு பததரை சித்திரை நித்திரை என்று அழிக்க முடியா முத்திரை குத்தி அண்ணாவின் பெயரில் நாமம் பதித்ததும் இப்போதுதான்.

அந்த நாமத்தால் தன் முத்திரை பதித்து மக்களினைச் சித்திரை (சித்திரவதை) செய்யும் பொய்யே பேசும் புழுத்தலையன் ஆட்சியேறி வஞ்சம் புரிந்ததும் லஞ்சம் பெற்றதும் கிடைத்த லஞ்சத்தில் கணக்குக் கேட்டு புது முட்டாள் மிளகாய் அரைத்ததும் தமிழ் நாட்டின் சரித்திரம்.

ஒருத்தனுக்கு ஒருத்தியென்று வரைவிலக்களம் கொண்ட நாட்டில் ஆசைக்கு ஒருத்தி என்றும் ஆனாலும் தான் பலியாகிப்போன சந்தேக அரக்கனுக்கு நெருப்பு என்றும் வழிகாட்டிப்போன இராமன் பேர் கொண்டவனே தன் சுகத்துக்கு பல மனைவிகள் தன் காலிடுக்கில் சுகம் தேட சில விபச்சாரங்கள் என்று தேடிக்கண்டு பிடித்ததும் .... விதியே என்று கண்மூடித்தூங்கியிருந்த தமிழ் ஜாதியும் இன்று விபச்சாரத்தின் கால்களில் விழுந்தெழும்புவதும் தமிழ் நாட்டின் தலை விதி.

(தொடரும் பொய் புராணம்..)

இரத்தம் வடிகின்ற இதழ்கள்

இந்திரா காங்கிரஸின் தலைமை இன்று புளகாங்கிதப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஸ்ரீ புதும்பூரில் புதுப்படையலிட்டு தேர்தல் திருவிழாவை ஆரம்பிக்கும் கனவு அடிபட்டுப்போனதென்னவோ வருத்தம் தான். இருந்தாலும் என்ன புராண காலத்து நளாயினி போல எடுத்த சபதம் முடிக்கும் வன்மம் பண்டை ரோம வீரம் தந்ததாயிற்றே என்று இந்திரா காங்கிரஸின் அடிபொடி தொண்டர்களில் இருந்து கால் வருடும் பிரணாப் முகர்ஜி எச்சில் வல்லபம் தூக்கும் சிதம்பரம் ஈறாக வாய் பேசா தூக்குச்சட்டி மன்மோகன் வரை... என்ன ஆச்சரியம் . எங்கோ ஒரு மூலையில் கிடந்த என்னை காலிடையில் தினவெடுத்த இந்திய இராஜகுமாரன் எங்கோ தூக்கி வைத்த கதை இன்னும் கிள்ளிப்பார்த்து உணர்ந்து கொள்ளும் நிலையிலேயே இருக்கின்றது.

சபதமாவது கத்தரிக்காயாவது உலகம் முழுதும் கூலியாய் கறைபோட்ட இனம் தன் காதலை தறித்தழித்த கதை மறக்கக் கூடியதா ? ஏழை இந்தியக் கூலி இன்னும் அறிந்து கொள்ள வேண்டியது எத்தனையோ... சொல்லிக் கொடுக்க வேண்டிய பாடங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றது.

நான் படிக்கவில்லையா கூலி மோழியை..? ஹிந்தி என்ற ஈன மொழியைப்பேசும் ஒவ்வொரு பொழுதும் என் இனிய இத்தாலியனைத் தொலைத்த சோகம் எத்தனை கொடூரமானது.

பத்திஞ்சி மறைப்பில் வெந்தமாலி பீச்சின் வெயில் காயும் சுகத்தைத் தொலைத்து பதினாறு முழம் சேலையில் இந்தி வெயிலில் புழுங்கும் புழுக்கம் என் எதிரிக்கும் வேண்டாம்.

இந்தியாவின் ராஜகுமாரன் என்பதனால்தானே மணமுடித்தேன். எத்தனை இந்தியப்பதர்கள் பிஸ்ஸா நெருப்புக்குள் போராடி ஸ்பக்காத்தி போல முகமழிந்து நிறமழிந்து போகின்றனர். ரொரினோவினதும் மிலானோவினதும் களியாட்டப்பாக்குகளில் எத்தனை கூலிக்கழவாணிகள் கஞ்சா அடித்து வித்து இத்தாலி மாபியாக்களையும் மிஞ்சி நிற்கின்றார்கள்.

இவர்களை விட என்ன இந்த ராஜகுமாரன் பால் என்னைக்கவர்ந்தது. அழகு ஆண்மை இனக்கவர்ச்சி எதுவுமில்லை. பதின்மத்தில் காமம் அறியும் நாட்டில் கிடையா சுகமெது கூலிகளின் நாட்டில். கிடைத்ததே .....அதிகார சுகம். கால் பிடிக்கும் மந்திரிகள்.. வாய் பேசா சோதா டாக்டர்கள்.... நாட்டின் கொள்கையை என் சேலைத்தலைப்பில் முடியும் அதிகாரிகள்... காரியமாகத்தன் பெண்டிரையும் கூட்டிக்கொடுக்கும் சோதாக்கள்.

இதை விட போபர்ஸ் ராஜகுமாரன் ... முசோலினியின் முத்து ..அவன் உள்குத்தும் வெளிக்குத்தும் எத்தன இனிமை...

உள்வீட்டில் களவெடுத்த கள்வனைப் பிடிக்க முடியா வெண்ணைகளின் கனவுகள்... வல்லாதிக்கம் வல்லரசு.. சிரிப்பதற்கும் நல்ல காமெடி காட்டும் மனிதர்கள்.

இவர்கள் கூலிகள் மட்டுமல்ல.. நல்ல காமடி காட்டும் ஜாலிகள்.

கள்வனும் காவாலியும் கேடியும் ஆட்சி செய்யும் களவாணி தேசம். இவர்களுக்கெல்லாம் இன்று ராணி நானே. அசெம்பிளியில் செருப்பிற்குக் கிடைக்கும் மவுசு இவர்கள் கோவிலில் என்றுமே கிடைக்காதது.

அது மகேசன் அசெம்பிளி... இது மக்கள் அசெம்பிளி...

இத்தாலிய மாபியாக்களும் பெறவேண்டும் பிச்சை இந்த இந்தியக் கூலிகளுடம்...

அடுத்த வேளைப் பிஸாவிற்கு வழியில்லாத ..பழுதடைந்த பியற் காரிற்கு வழியில்லாது கால நடையாகத்திரிந்த என் அம்மா செல்வதற்கு எத்தனை பென்ஸ்கார்..

ஹா..ஹா.. வெள்ளைத்தோலை வைத்து .. இன்னும் எத்தனை வித்தைகள் காட்டலாம்... காட்டிக்கொடுக்கும் கலை கூலிக்கே கை வந்த கலை... ஆனாலும் என்ன காலை வாராக் கூலி கண்டு பிடிப்பதே ..முடியாத முயல்க்கொம்பு வேலையாயிருக்கின்றதே.

என் பாதிக் கூலி மகன் ராகு(ள் ) ல் இடம் இந்திய தேசத்தின் மடமையைக் கையளித்தால் என் கடைசிக் காலம் வரை போபர்ஸ்ஸின் ராஜகுமாரனுடன் சேர்ந்திருக்க வற்றாத நிதியைக் கூலிகள் கொடுக்கும் வியர்வையாக.


அடிமைகள் தேசம் இது.. இந்திய ராஜகுமாரனை மயக்கிய அதே இடத்தை காலை நக்கும் நாய்களும் கேட்பது தான் இந்திய சோகம். ஹோமர் ஒடிசி போன்ற இதிகாசங்களிலும் இல்லை இதற்குப் பதில்...

என்ன செய்யலாம்...