Saturday, April 4, 2009

எலிகளை வேட்டையாடுவதா? புலிகளின் வேலை.


உலகத் தமிழர்களின் தலைவர் தானைத்தலைவர் தமிழால் தமிழுணர்வால் தமிழகம் கடந்தும் வாழும் தமிழ் நெஞ்சங்களில் அரியணை போட்டு உடகார்ந்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட ஏற்றங் கொண்ட முதல்வரின் உள்ளத்தில் இத்தகைய நச்சினை விதைத்தவர் யார் என்பதைத் தமிழுலகம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஏன்? ஏன்? என்ற கேள்விக்கு இத்தனை கீழ்த்தரமான முறையில் தேர்தல் கால விளம்பரம் பெற்றுக்கொள்ளும் அளவில் தாழ்ந்து போக முடியுமா? வேண்டுமா? என்ற வினாவைத் தொடுத்திருக்கின்றது இந்தச் செய்தி.

//3-4-2009 அன்று முதல்-அமைச்சரின் கோபாலபுர இல்ல முகவரியில் பெறப்பட்ட கடிதம் ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சின்னம் அச்சடிக்கப்பட்ட தாளில் அவரது உயிருக்கு அச்சுறுத்தி மிரட்டல் விடப்பட்டு உள்ளது. //


ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகள் தம் விடுதலையை வேண்டி எடுத்த முடிவு அவர்களின் சுதந்திர வேட்கையின் பாற்பட்டது. அரசியல் கூத்துக்களோ கேலிகளோ தில்லு முல்லுகளுக்கோ வேண்டி அவர்கள் இத்தனை இலட்சம் உயிர்களைக்காவு கொடுக்கவில்லை. 60 வருடத்திற்கும் (1948இன் பின்) மேலான
இன ஒடுக்கு முறையை அரசியல் ரீதியாக அகிம்சை ரீதியாக முகங்கொடுத்தும் தீர்க்க முடியாது போன பின்னரே ஆயுத ரீதியான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். அவர்கள் ஆயுதத்தின் மீது காதல் கொண்டவர்களோ கொலை செய்வதைதொழிலாகக் கொண்டவர்களோ அல்ல. சுதந்திர உணர்வும் தன்மான உணர்வும் (தமிழகத்தையும் விட) மீதூரப்பெற்றவர்கள்.

தங்கள் யுத்தத்தை தங்களின் மனவலிமை கொண்டு முன்னெடுத்தவர்கள். தங்களின் வளங்களை தங்கள் மக்களை நம்பி முன்னெடுத்தவர்கள். இன்றும் அதனையே செய்து கொண்டிருப்பவர்கள். இந்தியா முதல் எத்தனையோ நாடுகளின் நேரடி மறைமுக சூழ்ச்சிகளையும் ஆயுத உதவிகளையும் எதிர்த்துப்போராடுபவர்கள்.

இடையில் இந்தியச் சூழ்ச்சியில் தடம் மாறி துயர்பட்டு மீண்டு வந்தவர்கள். இந்தியாவின் கள்ளம் உணர்ந்து விலகிநிற்பவர்கள். இந்தியாவிடம் எதற்காகவும் கையேந்துவதை இன்று வெறுப்பவர்கள். இந்தியா எதிரியாக வந்தாலும் தயங்காது எதிர்த்துப் போராடக்கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்கள். சுதந்திர தாகம் கொண்டவர்களேயன்றி சுயநல அரசியல் செய்பவர்கள் அல்ல.

இது தான் யதார்த்தம் .இது தான் உண்மை . அன்று சில தமிழக அரசியல் வாதிகள் கொடுத்த சில நூறு இலட்சம் ரூபாய்களைத் தவிர தாய்த்தமிழகம் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் இருந்து தார்மீக உணர்வைத்தவிர வேறு எதையும் இம்மாபெரும் போராட்டம் பெற்றுக்கொள்ளவும் இல்லை. கேட்டதும் இல்லை.

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் தமிழீழ உறவுகளின் 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதப் போராட்டத்தில் எத்தனை மில்லியன் ரூபாய்கள் ஆயுதமாகவும் எத்தனை இலட்சம் மனித உயிர்கள் பலியாகவும் எத்தனை கோடி கோடி மனித உழைப்புகள் ஆகுதியாகக் கொட்டப்பட்டிருக்கும் இப்போராட்டத்தில் தாய்த்தமிழகத்தின் பங்களிப்பு எத்தனை சத விகிதம்? எத்தனை மில்லியன் ரூபாய்கள் தாய்த்தமிழக மக்களிடம் இருந்து வந்தது? எத்தனை வீத மனித உழைப்பு கொட்டப்பட்டது?

பதில் உங்களுக்கே தெரியும். பல கோடிகளைக்கொட்டி உருவாக்கப்படும் புனித கோவிலில் சில சில்லறைகளை வீசி எறிந்த தமிழக அரசியல்வாதிகளும் உறவுகளும் வாய் கிழியக் கதைப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை.

உதவி செய்யவேண்டுமென்பது என்ன தேவை? என்று சிலர் முணுமுணுக்கக் கூடும். அப்படி எந்தத் தேவையும் இல்லை. அதே போல ஈழப்பிரச்சினையில் கருத்துச் சொல்வதற்கோ அடாவடி செய்வதற்கோ கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பொங்கி எழுந்த பொது மக்களின் தார்மீக ஆதரவைக்கூட மனிதச்சங்கிலியென்றும் இராஜிநாமா என்றும் நீர்த்துப்போக வைத்த அரசியல் அராஜகங்களை நாம் அறிவோம்.

ஈழத்தமிழர் ஆதரவாக எழுந்த உணர்வினை அரசியல் வாக்காக மாற்ற கருணாநிதி எடுக்கும் குயுக்தி மிக்க தந்திரம் என்பதற்கப்பால் இதை நாம் பெரிதாக ஒன்றும் பார்க்கவில்லை. ஜெயலலிதாவும் இதே போல ஒரு காகித நாடகம் போட்டது இப்போது நினைவிற்கு வருகின்றது. குள்ள நரித்தந்திரத்தில் தமிழக அரசியல்வாதிகளை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது.

அதே அரசியல்வாதிகளைத் " தலைவா "என்று கொண்டாடுவதிலும் அடிக்கும் கொள்ளையை ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து அவர்களைத் தெரிவு செய்வதிலும் சிந்தனையற்ற முட்டாள்தனம்மிக்க விடாக்கண்டன் கொடாக்கண்டன் போல் செயல் செய்வதில் தமிழக மக்களை விஞ்சுவார் யாருமில்லை இவ்வுலகத்தில்.

வட இந்தியர்களாலும் சிங்களவர்களாலும் "கோமாளி" மாநிலம் என்று அழைக்கப்படும் நிலைக்கு தமிழகத்தைக்கொண்டு வந்தது யார் என்பதை மனச்சாட்சியுள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சிங்கங்களை(சிங்களவன) எதிர்த்துத்தான் புலிகள் போராடுகின்றார்கள். நாங்கள் வரப்போகின்ற 22 ஆம் நூற்றாண்டு பற்றிக்கனவு கண்டு கொண்டிருக்கின்றோம். சுதந்திர ஈழத்தின் உருவாக்கம் பற்றி திட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கின்றோம்.


கோமாளிக்கூத்துகள் ஆடுவதற்கு எங்களுக்கு நேரமில்லை. உண்ட சோறு செரிப்பதற்கு ஊதாரித்தனமாக வார்த்தைகளை கொட்டுபவர்கள் அல்ல நாங்கள்.

எலிகளைப்பிடிப்பது புலிகள் (தமிழ் ஈழ மக்கள்) வேலையல்ல.அதற்கு எங்களிடம் மலம் தின்னும் காகங்கள் (ஆனந்தசங்கரி ,டக்ளஸ்,கருணா) உண்டு.

எல்லோராலும் (எங்களாலும் தான்) மதிக்கப்பட்ட முதல்வரின் மேல் இருந்த இறுதிப் பாச இழையும் அறுந்துபோனதுதான் சோகம். மதிப்பையும் மரியாதையையும் செயல்கள் தான் உருவாக்கும். எட்டு வருடம் உலகை ஆட்டிப்படைத்த புஷ்ஷிற்கு ஒரு செருப்பு. 80 வருடம் தமிழை ஆட்டிப்படத்த முதல்வருக்கு ஒரு .....








Wednesday, April 1, 2009

இலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்: இந்திய எழுத்தாளர் அருந்ததி ரோய்

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்கு படாமல் திறமையாக மறைக்கப்படுகின்ற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்ற இனவெறிப் போர் என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழான 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா' வுக்கு எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான 'புக்கர் பரிசு' பெற்ற 'த கொட் ஓஃப் ஸ்மோல் திங்ஸ்' எனும் புதினத்தை எழுதியவர் அருந்ததி ரோய்.

இலக்கியப் பணிகளுக்கு இடையே சமூகத்தின் தீவிரப் பிரச்சினைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கு எதிராக களமிறங்கி சமூக சேவையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவரின் கட்டுரையை இங்கு தமிழில் தருகிறோம்:

இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்துக்கு, சூழ்ந்துள்ள மௌனமே காரணம். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, இந்தியாவில் உள்ள முதன்மையான செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் சரி, அனைத்துலக செய்தி ஏடுகளிலும் சரி ஏறக்குறைய செய்திகளே வெளிவருவதில்லை. ஏன் இப்படி இருக்கிறது என்பது ஆழ்ந்த கவலை அளிக்கும் விடயமாகும்.

இலங்கையில் இருந்து கசிந்து வரும் சிறிதளவு தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நாட்டில் ஜனநாயகத்தின் அடையாளம் ஏதேனும் தென்பட்டால் அதனைத் தகர்ப்பதற்கும், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்களை இழைப்பதற்குமே 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பரப்புரையை சிறிலங்கா அரசு ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தி வருகிறது என்றே தோன்றுகிறது.

தங்களை அப்பாவிகள் என்று மெய்ப்பிக்காத வரையில், ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிதான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் சிறிலங்கா அரசு, அப்பாவி மக்கள் உள்ள பகுதிகள், மருத்துவமனைகள், தங்கும் இடங்கள் மீது குண்டு வீசி அவற்றைப் போர்ப் பகுதியாக மாற்றி வருகிறது.

சண்டை நடைபெறும் பகுதியில் 2 லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பகமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு 'நலம் காக்கும் சிற்றூர்கள்' அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.

இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறு
கூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.

ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகளைத் 'துடைத்து எறிய வேண்டும்' என்பதை சிறிலங்கா அரசு அறிவிக்கப்பட்ட குறிக்கோளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அப்பாவி மக்களும், 'பயங்கரவாதிகளும்' வீழ்ந்து கொண்டிருப்பது, சிறிலங்கா அரசு இனப் படுகொலையை நடத்தும் விளிம்பில் இருப்பதன் அறிகுறியாகத் தோன்றுகிறது.

ஏற்கெனவே பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் பல்லாயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்கள் நரகத்துக் கொடுமைகளின் அனுபவச் சித்திரிப்புகளாக உள்ளன.

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்குப் படாமல் திறமையாக மறைக்கப்படுகிற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகிற இனவெறிப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.

தண்டனைக் உட்படாமல் சிறிலங்கா அரசு இந்தக் குற்றங்களை இழைத்து வருகிறது. ஆழமாக வேரோடியுள்ள இனவெறித் தப்பெண்ணங்கள்தான் இலங்கையில் தமிழர்கள்
ஒதுக்கப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளன என்பதையே இது உண்மையில் வெளிப்படுத்துகிறது. அந்த இனவெறிக்கு சமூகப் புறக்கணிப்பு, பொருளாதார முற்றுகை, கலவரம், சித்திரவதை என நீண்ட வரலாறு உண்டு.

வன்முறையற்ற அமைதி வழியிலான எதிர்ப்பாகத் தொடங்கி, பல பத்தாண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரின் கொடிய தன்மைக்கான வேர்கள் இதில்தான் அடங்கியுள்ளன.

ஏன் இந்த மௌனம் இலங்கையில் இன்று சுதந்திரமாகச் செயற்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை என்று இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியிருக்கிறார்.

சமுதாயத்தை 'அச்சத்தில் உறைய வைக்கிற' கொலைக் கும்பல்கள், 'வெள்ளை வேன் கடத்தல்கள்' தொடர்பாக எல்லாம் சமரவீர தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உட்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்.

பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் சிறிலங்கா அரசு பயன்படுத்துவதாக அனைத்துலக பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு பொருள் உதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற்றுக் கொள்ள முடியாதது. மற்ற நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான்? சீனா? சிறிலங்கா நிலைமைக்கு உதவி செய்ய அல்லது தீங்கு விளைவிக்க என்ன செய்கின்றன?

இலங்கையில் நடைபெறும் போர் தமிழ்நாட்டில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. 10-க்கும் அதிகமானோர் தீக்குளித்து இறந்துள்ளனர். அரசியல் தந்திர வெளிப்பாடுகள் சில இருந்தாலும், பெரும்பாலும் மக்களின் சீற்றமும், வேதனையும் மெய்யானவை. இது தேர்தல் சிக்கலாக மாறியிருக்கிறது.

இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் அசாதாரணமானது. இங்கே ஏன் இந்த மௌனம்? இந்தச் சிக்கலில் இங்கே 'வெள்ளை வான் கடத்தல்கள்' எதுவும் இல்லையே. இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பாதிப்பின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த மௌனம் மன்னிக்க முடியாதது.

முதலில் ஒரு பக்கத்துக்கு ஆதரவாகவும் பிறகு இன்னொரு பக்கத்துக்கு ஆதரவாகவும் நிலை எடுத்து பொறுப்பற்ற முறையில் பட்டும் படாமல் மேலோட்டமாகச் செயற்படும் இந்திய அரசின் நீண்ட கால வரலாற்றைப் பார்க்கும்போது இந்த மௌனம் மிகவும் மன்னிக்க முடியாதது. நான் உட்பட, நம்மில் பலரும், இது தொடர்பாக முன்பே குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போர் பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்காததே அதற்குக் காரணம்.

படுகொலைகள் தொடர்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினிக் கொடுமையை எதிர்நோக்கி உள்ளனர். ஓர் இனப் படுகொலை நிகழ்வதற்குக் காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் நாட்டில் ஏன் இந்த சாவு அமைதி? இது மாபெரும் மனிதப்பேரழிவுத் துன்பம். காலம் கடப்பதற்கு முன் உலகம் இப்போதே தலையிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, March 23, 2009

மிருகவதை மனித வதை- வருண்காந்தி யார் பிள்ளை?


உத்தரப்பிரதேசமாநிலம் பிலிபிட் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக ¨ßjRlThÓs[ YÚi Lôk§, úRoRp ©WNôWd áhPj§p úTÑmúTôÕ Øv#mLÞdÏ G§Wô] LÚjûR ùR¬®jRRôL TWYXôL ×Lôo GÝkÕ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலபல அரசியல் நெருக்குதல்களால் (அவருடைய கருத்து) தேர்தல் ஆணையமும் வருண் காந்தியை பா.ஜ.கட்சி சார்பில் போட்டியில் நிறுத்துவதைத் தவிர்க்கும் படி அக்கட்சிக்கு ஆலோசனை கூறியுள்ளது.

பா.ஜ.கட்சித்தலைகளெல்லாம் ஒன்று கூடி அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வம்படியாக அறிவித்து இந்தியா இந்துப்பயங்கரவாதிகளுக்கு மட்டுமே சொந்தமென்று மீண்டும் நிரூபித்துள்ளனர்.

இதே பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேனகா காந்தி மிருக வதைக்கெதிராக மிகப்பெரிய போராட்டத்தை எடுத்திருந்தார் அவர் அமைச்சராய் இருந்தபோது.. எமர்ஜென்ஸிக்காலத்தின் போது தன் கணவர் சஞ்சே காந்தியால் எடுக்கப்பட்ட உயிர் வதைகளுக்கு எதிரான பிராயச்சித்தமாக அவர் அதைக்கருதியிருக்கக் கூடும். சஞ்சேயின் அகால மரணமும் தெய்வம் நின்றறுக்கும் என்ற பொன்மொழியும் அறிந்ததனால் கூட தன் வம்சத்தைக்காக்கும் பணியாக மேனகா காந்தி காட்டில் வாழ்ந்த விலங்களுக்கு பாதுகாப்பை வலியுறித்தியிருக்கக் கூடும்.

இதே நேரம் அகன்ற பாரதக்கனவைக் கட்டி மேய்க்க வந்த மூப்பர் ராஜீவ் காந்தியோ ஈழத்தில் காலூன்ற போட்ட சோத்துப்பருக்கைகள் செரிக்குமுன்னரே அவர்களைக்கொன்று போட்ட வரலாற்றின் நாயகனானார்.

சந்தண மாலைகள் போட்ட கரங்களின் வாசனை போகுமுன்னரே பாரத டாங்கிகளின் செயின் புளொக்குகளில் உடைலைச் சிதைத்து உயிரை விட்டனர் அவ்வப்பாவி மக்கள். பூரண கும்பம் வைத்து வணங்கி வரவேற்ற கரங்கள் இறங்குமுன்னரே சிரங்கள் கழுத்திலிருந்து இறங்கி சிதறி உயிரை விட்டனர் அவ்வேதிலி மக்கள்.

இந்திய எமேர்ஜென்ஸிக்காலத்தில் சஞ்ஜே சிதறுண்டுபோனது போல் ஈழத்தின் எமேர்ஜென்ஸியில் மேய்ப்பரும் உடல் சிதறிப்போனார்.

மேய்ப்பர் உழுத வயல் வெளிகள் அகன்ற பாரதக்கனவுகளின் எல்லைகளை இன்று வன்னியின் தொலைவு வரை நீட்டிக்கொண்டிருக்கின்றது.

அதே சந்தண மாலை போட்ட மக்களும் கும்பம் வைத்து வரவேற்ற மக்களும் இப்போதும் தம் இரத்தத்தைப் பாச்சி வன்னிக்காடுகளை வள்மாக்குகின்றார்கள். காடுகளில் வாழ்ந்த விலங்குகளைக்காத்த எந்தக் கருணையும் காடுகளில் உரமாகும் மனிதர்களைக்காக்க வரவேயில்லை.

இதே நேரம் வருண் காந்தியின் மீது மற்றுமொரு பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


//வருண் காந்தி இஸ்லாமியர்களையும், சீக்கியர்களையும் இழிவுபடுத்திப் பேசியதாக இன்னொரு புகார் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது. இந்தப் புகாரையும், முதல் புகாரைக் கொடுத்த பிலிபித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சிங்கே கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள சிடியில், இந்த தொகுதியில் ஒரு பைத்தியக்கார சீக்கியர் (வி.எம்.சிங்) போட்டியிடுகிறார். அவர் ஒரு முஸ்லிம் ஏஜெண்ட். அவரை ஆதரிக்கும் இந்துக்கள், இந்து மதத்தின் மாபெரும் துரோகிகள்.

இதுபோல், ரியாஸ் அகமது என்பவரும் போட்டியிடுகிறார். அவர் அப்பட்டமான பாகிஸ்தானி. இத்தகையவர்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்துவிட வேண்டும்.

எனக்கு முஸ்லிம்களின் ஓட்டு தேவையில்லை. இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். இந்துக்கள் ஓட்டு போடாமல் இருப்பது, மதத்துக்கு துரோகம் செய்வது போன்றது. இந்து ராணுவத்தை அமைத்து, துப்பாக்கி உரிமம் கொடுப்பேன் என்று பேசியுள்ளாராம் வருண் காந்தி. //

மனிதர்களை வதைக்கும் பண்பு பரம்பரை ஜீன் கடத்தலாய் இருக்கக் கூடும். பாவம் அவர் தான் என்ன செய்வார்.

இதே நேரம் சோனியா காந்தி "TVeLWYôRjûR Lôe¡Wv Lh£Vôp UhÓúU A¥úVôÓ J¯dL Ø¥Ùm'"UdL[ûYj úRoRûXùVôh¥ LoSôPL Lôe¡Wv Lh£«u úRoRp ©WNôWjûR §eLs¡ZûU RôYQùLúW«p ùRôPe¡ûYjதபோது அவர் இவ்வாறு á±யுள்ளார்.


திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர் கூறுவதில் உண்டு. பயங்கரவாதத்தை உருவாக்குபவர்கள் தானே அதை நிறுத்தவும் ஒழிக்கவும் முடியும்.

வருண் காந்தியின் இந்தப் பேச்சிற்கு மேய்ப்பரின் புதல்வி ப்ரியங்கா இவ்வாறு அறிவுரை கூறியுள்ளார்.
"TLYj ¸ûRûV Øû\VôLl T¥jÕ ×¬kÕ ùLôiÓ ©\Ï ùTôÕdáhPeL°p úTNÜm Guß YÚi Lôk§dÏ ©¬VeLô A±ÜûW á±Ùs[ôo."

இன்றைய ஈழத்தின் அவலத்திற்கு இராஜீவ்வின் மரணமே காரணம் எனக்கூறிக்கொள்பவர்கள் காரியமாற்றுபவர்கள் பகவத் கீதையின் இந்த வாசகத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே"

தன் கடமையைச் செய்த தனுவைப் போல பல தனுக்களை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்.

இப்போ சொல்லுங்கள் வருண் காந்தி யார் பிள்ளை?

Saturday, March 21, 2009

புலிகளின் தோல்வி தமிழீழத்தின் விடியலா?


எனக்குள் இந்தக்கேள்வி இப்போது அடிக்கடி தோன்றிக்கொண்டிருக்கின்றது. தொடர்ந்து மூன்றாம் அணியைத் தேடிய புற்றீசல் பதிவுகளைப்பார்க்குந் தோறும் இப்படியான ஒரு நம்பிக்கையை இவர்கள் கொண்டுள்ளார்களோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.

மனித மேன்மைகளை வெளிக்கொண்டுவருவதற்குப்பதிலாக வலிமையான அடக்கு முறைக்குள் அதனைக் கட்டிப்போட்ட பெருமை மார்க்ஸியத்திற்கு உண்டு. சம உரிமையின் பேரால் மனித நீதியும் ஆசையும் அன்பும் பாசமும் சமூகத்தின் மிகப்பெரிய அடையாளமான குடும்ப வாழ்வும் வரைமுறையற்ற ஒடுக்கு முறக்குள் அடக்கப்பட்டதே இன்று சிதறுண்டு கிடக்கும் சோவியத்தின் வரலாறாக இருக்கின்றது.

1917 இல் பெரு வெளிச்சமாக அடையாளம் காணப்பட்ட சமதர்ம சமுதாயத்தின் எழுச்சி எழுபது வருட கால இடைவெளியில் தன் சாயம் வெளிக்க காலாவதியாகிப்போனது. மனிதர் எப்போதும் தம் சிந்தனையால் ஆளுமையால் செயலால் வலிமையால் ஒருவருக்கொருவர் சமனானவர்கள் அல்ல என்பதே இதன் காரணமாயிருக்கக் கூடும். இப்படிப்பட்டவர்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சரிக்கட்டும் முயற்சியுடன் இணைக்கும் கோட்பாடு எப்போதும் வலிமையாய் இருந்து விட முடியாது.

இதையும் மீறிய தாழ்வில் தாழ்ச்சியும் உயர்வில் உயர்ச்சியும் பார்க்கும் மனோபாவத்தை மனித காருண்யத்தை பிரயோகித்து நிவர்த்திக்க முடியும் என்பதே நவீன மனிதவியலின் நீட்சியாயிருக்க வேண்டும்.

இதன் முதற்படியாக மனித இருப்பைக் கேள்விக்குறியாக்க முயலும் பொருள் முதல் வாதத்தின் அகோர எழுச்சியான உலகமயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். தனி மனித சுரண்டலைத் தாற்பரியமாகக் கொண்டிருக்கும் உலக மயமாக்கலுக்கு நாம் கொடுத்திருக்கும் விலை மிக அதிகமென்றே படுகின்றது.

போரையும் நோயையும் பட்டினிச்சாவையும் துரிதப்படுத்தும் இவ்வுலக ஒழுங்கினைச் சரி செய்யும் வல்லமை காலாவதியாகிப்போன கயூனிஸக் கோட்பாடுகளுக்கு கிடையாது என்பதே உண்மை.

உலகளவில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூக அங்கமாகிப்போன ஈழத்தமிழ் மக்களைப்பொறுத்தளவில் மார்க்ஸிய கம்யூனிஸ முன்னெடுப்புகள் மேலும் ஒரு பாரிய ஒடுக்குமுறைக்கூடான எதிர்ப்புக்கே வழி காட்டும் என்பதை இந்த மூன்றாம் அணியின் மூக்கணாங்கயிற்றைப் பற்றிச் சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புரட்சிகரம் என்ற சொல்லடுக்கில் ஒழிந்து கொள்ளும் உங்கள் வெற்றிடங்களை மீண்டும் மீண்டும் முன்னெடுக்கும் உங்கள் மடமையை உணர்ந்து கொள்ள வேண்டும். புலியெதிர்ப்பு என்ற போர்வையில் உங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வது என்பதற்கப்பால் எதுவித அரசியலும் அற்றவர்கள் நீங்கள் என்பதை மக்கள் ஏலவே அறிந்து கொண்டிருக்கின்றார்கள்.

புலியெதிர்ப்பு என்பது ஒருவகை பாஸிஸ மறுப்புப்போராட்டம் என்று கூறிக்கொள்ளும் உங்களது அரசியல் உலகமயமாக்கல் மூலம் உலக மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் பாஸிஸம் பற்றிய தெளிபையும் கொண்டிருக்காது போனதேன்.

உலகமயமாக்கல் மூலம் சிறுபான்மை மக்களின் மொழி இன அடையாளங்கள் காவு கொள்ளப்பட்டுக்கொண்டிருப்பதை புலியெதிர்ப்பு அரசியலை மட்டும் தூக்கிப்பிடிப்பதன் மூலம் எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று நம்புகின்றீர்கள்.

புலிகளின் மறம் சார்ந்த இருப்பை விட மேலான கொடுமையுடன் இன்று ஈழ மக்களின் இருப்பையும் தனித்தன்மையையும் சிதைக்க முற்படும் சிங்கள இனவாதம், உலக மயமாக்கலின் உதவியூடாக இலங்கையைக்காவு கொள்ளவிழையும் அகன்ற பாரதக்கனவுகள் பற்றியும் அதனை எதிர்கொள்ள ஈழமக்களைத் தயார்ப்படுத்தவும் எப்போதாவது நீங்கள் முயன்றதுண்டா?

புலிகளின் இயல்புகளுடன் ஒத்துப்போகாதவனாயினும் நெருக்கியடிக்கும் சிங்கள இனவாதத்தின் கோரத்தில் இருந்து தமிழ்த்தேசியம் இதுவரை காத்துக் கொள்ளப்பட்டிருப்பது அவர்களாலேயே அன்றி காகிதப் புலிகளாலான உங்களால் அல்ல. தமிழ்த்தேசியத்தின் இருப்புக்குக் காத்திரமான கருத்தியல் உருவாக்கத்தை முன்வைக்காத உங்களைக் காகிதப்புலிகள் என்றழைப்பதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்.

புலிகளின் தோல்வியை இறைஞ்சி வரவேற்கின்ற உங்கள் வழி பாடுகள் அடுத்து என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத அந்தகாரத்தில் சிதம்பிப்போய் நிற்பதை உங்களைப்போலவே நாங்களும் அறிவோம். புலிகளுக்கு எதிரான மாற்றீடுகளைக் கண்டு பிடிக்கும் வரை உங்கள் புலியெதிர்பை உடைப்பில் போடுவதே நீங்கள் ஈழத்துத் தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.

மாற்றீட்டைக் கண்டு பிடிக்க உங்களைப்போன்றவர்களுக்கு மிக நீண்ட ..நீ..ண்..ட காலம் பிடிக்கக் கூடும். அது வரை வெத்து வேட்டு வேடிக்கைகளை நிகழ்த்தாதிருங்கள். புலிகளின் பாஸிஸத்திற்கும் சிங்கள பேரினவாத பாஸிஸத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசம் மிகப் பெரிது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். அது தமிழ்த் தேசியத்தின் இருப்பு.

Tuesday, March 17, 2009

சிங்களப் பைசாசங்களும் சில தமிழ் நாய்களும்




இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததே ஒரு போதாத வேளை என்றுதான் தோன்றுகின்றது. தன் வீட்டுக்குள் வந்து கொள்ளி போட்டுத் தீமூட்ட தமிழன் தானே வழி காட்டுகின்றான் என்ற போது ஏற்பட்ட ஒரு அதீத கடுப்பு.

இந்த நேரத்தில் தான் மூதூர் தயிர் சேர்த்து சாப்பிட உடலுக்கு நல்லது என்று என் பெரியாத்தா சொல்லியிருக்கின்றா. உடல் சூட்டிற்குத் தயிர் போல மூளைச்சூட்டிற்கு .. நன்றாகத் திட்டித் தீர்ப்பதுதான் ..இது நான் கண்டறிந்த வைத்தியம்.

வன்னியில இன்று புலிகள் போராடுகின்றார்கள். போராடவில்லை என்பவர்களும் மல்லுக்கட்டுகின்றார்கள் என்பதையாவது ஒத்துக்கொள்ளுகின்றார்கள். சரி யாருடன் ..எங்களுக்கு ..தமிழருக்கு... எங்களுக்குப்பிடிக்காத சிங்களவருடன் .. அல்லது எங்களைக் குட்ட நினைக்கிற சிங்களவருடன்... எப்படியிருந்தாலும் மகிழ வேண்டியது தானே நாங்கள் செய்ய வேண்டியது..

அப்படியில்லையே ... எங்களைக்குட்ட நினைப்பவரையே எங்கள் வீட்டிற்குக் கூட்டி வந்து .. வாசல் முதல் கொல்லை வரை காண்பித்து ... என்ன இது அதைப்பற்றி நெஞ்சு நிமிர்த்திய பதிவுகள் வேறு..

நீங்களும் ஒரு காலத்தில் இயக்கங்களால் வளர்க்கப்பட்டவர்கள் எனின் அப்போதைய உங்கள் நோக்கம் எங்கள் மண்ணில் இருக்கும் சிங்களவரை அவர்கள் ஊருக்கு அனுப்புவதாகத் தானே இருந்தது.

அதற்குப்பின்னால் தானே நீங்கள் ரஷ்யத்து மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் ரொக்ஸியையும் மற்றவர்களையும் கண்டீர்கள். அதற்கு முன்னால் உங்கள் உணர்வுகளைத் தூண்டியவர்கள் உங்கள் ஊரில் செல்லடியிலும் ஹெலி சுட்டதிலும் விழுந்து கிடந்த உங்கள் ஊர் சுப்பிரமணியமும் சோமண்ணையும் தானே.

இதைதாங்க மாட்டாமல் தானே புரட்சி செய்ய அதுதாங்க துவக்குத் தூக்க வெளிக்கிட்டீங்க. யாழ்ப்பாணத்தில இருந்து கொழும்புக்கே போகாத எத்தினை பேர் கடல் தாண்டி கோடியாக்கரை போனீர்கள். எதனால ...இதெல்லாம் நடந்தது ..உங்களுக்குள்ள இருந்த புரட்சி இரத்தம். ஒரு தமிழன் சாவதைக்கண்டும் பொறுக்க முடியாத தமிழ் இரத்தம். புல்லரிச்சது எங்களுக்கு அப்போது.

ஆண்டுகள் கடந்து சென்றது .காட்சிகளும் பலதும் மாறியது. விரும்பியும் விரும்பாமலும்... பார்வையாளர்களாய் நாங்களே இருந்தோம் கால்த்தின் சாட்சிகளாய்.

இன்றும் எம்மக்களின் மீது சிங்களப் படைகளின் அதே ஆக்கிரமிப்பு அத்து மீறல். இன்றெல்லாம் உங்களுக்கு கோபமே வருவதில்லை. கொலைக்கரங்கள் பற்றி இப்போதெல்லாம் நீங்கள் பேசுவதில்லை. எப்போதோ ஓடும் பஸ்ஸில் உங்கள் சட்டையைப் பிடித்திழுத்து முந்தி யேறியவர்களைப் பற்றியே பேசுகின்றீர்கள். போக நினைத்த பயணம் மறந்து தத்துவ விசாரம் என நினைத்து சாக்கடைக்குள் பண்டியின் நிண நாத்தத்துடன்.

செத்து விழும் உங்கள் சோதரர்கள் பெண்டுகள் எல்லாம் மறந்து ஏறத் தவறிய பஸ்ஸை நினைத்து. மல்லுக்கட்டும் இவர்களுடன் சேர்ந்து மரணிக்கும் அவர்களையும் கொல்லும் கொலைக்கரங்களை மறந்து .. மல்லுக்கட்டுவதே பிழையாக.. நீங்களும் கோடியாக்கரை போனதே அதற்காகத்தானே.

எப்படி உங்களால் எல்லாம் மறக்க முடிகின்றது. உங்கள் மார்க்ஸும் ஏங்கல்சும் இதைத்தானா சொல்லிச்சென்றார்கள்.உன் மனிதன் இறந்து வீழும் போதும் உன் பகையை மறக்காதே. அவனையும் அவனோடு சேர்ந்த உன் சோதரனையும் கொன்று போடு என்பதையா அவர்கள் சொல்லிப்போந்தார்கள். அதனால்த் தானா சோவியத்தும் தோத்துப்போனது.

புரட்சிகரம் என்ற போர்வையில் பிழைப்பு வாதம் விதைக்கும் இராயாகரன் முதல் புலியெதிர்ப்புப் போர்வையில் முட்டையில் மயிர் பொறுக்கிக் கோலம் போடும் சிறீரங்கன் வரை பதில் சொல்ல வேண்டியவர்கள் நிறையவே உண்டு.(இவர்கள் தமிழ் மணத்தில் தவறான தகவல் பரப்புவர்கள் என்பதால் பெயர் குறிக்கப்பட்டிருக்கின்றது)

இவர்களைப்போல் தன் மனிதன் இறந்து விழும் கணங்கள் உள்ளும் கதை விடத் தெரிந்தவர்கள் அனைவரும் பதில் கூற வேண்டும். (தன்னை நம்பாத பிற சக்திகளை நம்பி அடிதொழுபவர்கள் நிறையவெ நம்மிடையில் உண்டு)

தமிழ்த் தேசியத்தின் எழுச்சி இன்று பல நாட்டு அரச வர்க்க ஆதாயங்களைக் கேள்விக்குறியாக்க முனைவதும் அதனாலேயே அவை ஒருங்கிணைந்து தாக்குவதும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. இந்து சமுத்திரத்தின் எங்கோ ஒரு மூலையில் கிடந்த இலங்கையின் தமிழ் மக்களைப் பற்றி உலகமே பேசிக்கொண்டிருப்பது... மக்கா நாம சாதிச்சிட்டோமடா..

ஈழத்தமிழன் ..இதுவரையில்லை இன்னும் இருப்பான்...

Sunday, March 15, 2009

புலிக்காச்சலும் பாகப்பிரிவினையும்


வன்னி மண்ணை இரத்தம் தோய்க்கும் ஈரம் காயும் முன்னர் புகலிடப் புரட்சி வாதிகளும் புத்திசாலிகளுமாய்த் தம்மை எண்ணிக்கொள்பவர்களும் ஓச்சலொழிவு இன்றி தட்டச்சி தம் பிரகடனங்களை வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். தேர்தல் காலக் காச்சலில் ஓடி அணி சேர்ந்து கொள்ளமுடியா சொரியல் கட்சிகள் மூன்றாம் அணியைத் தேடிக் கொள்வதைப்போல இவர்களும் மூன்றாம் அணியைத் தேடி தம்மிடையில் யுத்தம் புரியத் தொடங்கி விட்டார்கள்.

புலிகளுக்கு சேடம் இழுக்கத் தொடங்கிவிட்டது . அவர்களுடைய இறுதி இன்னும் சில வாரங்களில் நிகழ்ந்து விடும் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்கள்.

புலிஆதரவு தளத்தை இனி செல்லாக்காசெனப் புறந்தள்ளியதைப்போலவே புலியெதிர்ப்பு அணியையும் புலியெதிர்ப்பு அன்றிப் "புரட்சிகரம்" இல்லாதவர்கள் என்ற சொல்லடையால் சுலபமாக போட்டிக்களத்தில் இருந்து அகற்றி விட்டுத் தம்மைத்தாமே முன்னிலைப்படுத்தத் தொடங்கியுள்ளனர் இவர்கள்.

முன்னிலைப்படுத்துவதுடன் மூன்றாம் அணியின் மூக்கணாங்கயிற்றை கைப்பற்றும் போட்டியில் மூர்க்கத்துடன் களமிறங்கியுள்ளனர். இதே வேளை தனிப்பட்ட புரட்சிக்காரரையும் பொருட்டாய்க் கொள்ளாத தன்மையுடன் தம்மைச்சுற்றி சில பல அடிப்பொடித்தொண்டரைக் கொண்ட இக்குழுவாதிகள் அவர்கள் கூறுவதைப்போல இது வரை செய்து வந்த புரட்சிகர அரசியல்தான் என்ன?

பத்தியெழுத்தாளர்களாக தம்மை வெளிக்காட்டி சில பல "ஆஹா" பேஷ்.. பேஷ்" போன்ற ஜால்ரா கிலாகிப்புகளைப் பெற்றுக் கொண்டது தான் அவர்கள் செய்த புரட்சிகரம். போராடும் மக்களை விட்டு தப்பிப்பிழைத்து ஓடி ஒழித்து வந்து ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் சில பல பியர்களைக் குடித்து மூளையைச் சூடேற்றி எழுதிக்குவித்தவை தான் அவர்களின் சொற்களில் "புரட்சி" என்பது.

வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் பின் தனித்தமிழீழக் கோரிக்கையில் முளைத்தெழுந்த காளான் இயக்கங்களின் பெயர்கூட அறியாது வள்ளமேறி கோடியாக்கரையில் இறங்கியவர்கள். முட்காடாய் தமிழகம் எங்கும் முளைத்தெழுந்த காம்புகளில் முளைத்தது தான் இப்புரட்சிகர அரசியல்.

மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் அது வரை அறியாத தெரிந்தெடுக்கப்பட்ட இவர்களின் மூளையில் அடைக்கப்பட்டவை தான் புரட்சி கரக் கருத்துக்கள். அதுவும் தமிழ்க்கூட்டணி போன்ற சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளின் இறகுச் சூட்டில் குளிர்காய்ந்த இளைஞரணியின் அங்கத்தவர்களைத் தலைவர்களாய்க் கொண்ட இவ்வியக்கங்களின் புது லேபல்களாய் வந்து சேர்ந்ததே இப்புரட்சிகர மார்க்ஸிய லெனினிய ரொக்ஸிய வாதங்களும் வாய்ப்புரட்டுகளும்.

அக்காலத்து யாழ்ப்பாணத்திய சண்முகதாசனின் கம்யூனிஸப்பாதிப்போ சீன மாவோவிஸ வாதிகளின் நிழல்களோ பாரம் பரியமாகவோ இல்லாத இவர்களால் யாழ்ப்பாணத்திய சாதீயக் கட்டுக்கோப்பையும் பொருள் முதல் வாதப்போக்கையும் உடைக்க முடியாது அவையெல்லாம் முனை மழுங்கிப்போன சரித்திரம் தெரிந்து கொள்ள முடியாது போனதில் ஆச்சரியமொன்றுமில்லை.

சோவியத் புரட்சி வெற்றித் தாக்கத்தில் பூர்ஷுவாக்களை எதிர்க்க வீறுகொண்டெழுந்த சீனப்புரட்சி விவசாயத்தொழிலாளர்களை உட்கொண்டதால் தடம் மாறி மாவோயிஸமாக தன்னை வளர்த்துக் கொண்டது. அதையும் விட வீரியம் மிக்க பிரச்சினையாக சாதீய பொருளாதார அமைப்பையும் பணபலற்ற தொழில் வாய்ப்பற்ற உதிரிக் கூலித் தொழிலாளர்களையும் கொண்ட யாழ்ப்பாண தீபகற்பத்தில் எதைச் சாதிக்க விழைகின்றார்களோ.

கூர்மையான ஆயுதத்தின் முன் அடங்கி நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் இம்முரண்பாடுகளின் முன்னால் இவர்கள் இன்னுமொரு முறை தோத்துப் போவார்கள். முதல் தோல்வி மார்க்ஸிய சிந்தனையுடன் புரட்சிகர ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கையில் நேர்ந்ததை நாம் அறிவோம்.

புரட்சிகரப்போராட்டத்தின் கனவுகள் உட்கட்சி முரண்பாடுகளிலும் தலைமைகளின் முகமூடி கிழிக்கப்பட்டு அம்பலமானதிலும் நொருங்கிப்போய் பர தேசங்களுக்கு மூட்டை முடிச்சுகளுடன் ஓடிச்சேர்ந்தவர்கள் மூளைகளில் அளவு கணக்கின்றி அடைக்கப்பட்ட தத்துவ மூட்டைகள் அரிப்பெடுத்தபோது சஞ்சிகைகள் எழுதத் தொடங்கினார்கள்.

புற்றீசல் போலப்புகலிட இலக்கியங்களாக வெளிக்கிட்ட இப்புத்தகங்கள் மார்க்ஸியப் புழுகுகளுடன் பெண்ணீயம் சாதீயம் என்று பல கிளைகளில் தாவிப்பாய்ந்து தமிழக தலித்தியத்தையும் கடன் வாங்கிக் கொண்டது. இவர்களின் மூளைச்சூடு கொதி நிலையடைந்து தனி மனிதத் தாக்குதல்களையும் விரிவாக்கி முற்போக்குவாதம் பிற்போக்குவாதம் என்று விரிவடைந்து சென்றது.

பெண்விடுதலையை கடன் வாங்கிக் கொண்ட பல பெண்களும் கட்டுடைத்தல் என்னும் போர்வையில் கணவர்களையும் மாற்றிக்கொண்டது சுவாரஷ்யமான சம்பவங்கள். அதி நவீனத் தத்துவவாதிகளாகத் தம்மை அடையாளங் காட்ட ஆசைப்பட்ட சில ஆண்கள் தமிழகக் கள்ளுக்கடைகளிலெல்லாம் தலித்தியம் பேசி தண்ணி அடித்துத் திரிந்தது ஒரு காலம்.

யாழ்ப்பாணத்தில் சிரட்டையிலும் மூக்குப்பேணியிலும் தண்ணீர் கொடுத்த சாதீய மான்கள் எல்லாம் தலித்தியம் சாதீயம் பேசி தலித்திய மகாநாட்டை ஐரோப்பிய வீதிகளுக்கு இறக்கு மதி செய்தது தான் இவர்கள் செய்த புரட்சி. மேலை நாட்டு வாழ்க்கை முறையிலும் அவசர கதியிலும் மறக்கப்பட்டு வந்த இம்மனிதப்பண்புகள் அற்ற நடைமுறைகளைத் தோண்டி எடுத்து தோரணங் கட்டி விட்டது தான் இவர்களின் புரட்சி.

இப்புரட்சி வாதிகளும் ஜனநாயக மறுப்புக்கெதிராகப் போராடியதாய் தம்மை அடையாளங் காட்டிக் கொண்டவர்களும் ஈழத்தமிழ் மக்களை ஆட்சி செய்யும் சிம்மாசன்க் கனவுகளுடன் அக்கப்போரில் இறங்கியுள்ளார்கள்.

இவர்களில் யாரும் இதுவரை தமிழ் மக்களின் துயரங்களைப்போக்கடிக்கும் நடவடிக்கைகளிலோ துயரங்களைத் தந்த சிங்களப் பேரினவாதிகளின் மீதோ அதன் பின்னணியில் கால்கோளாகவிருக்கும் இந்திய வல்லாதிக்கத்தின் மீதோ ஒரு சிறு துரும்பையும் எடுத்துப்போடவில்லை என்பது தான் துரதிர்ஷ்டம்.

அதே வேளை புலியெதிர்ப்பு என்ற போர்வையில் அவர்களின் அழிவுடன் மக்களின் அழிவையும் நியாயப்படுத்தி சந்தோஷப்பட்ட பாசிசவாதிகளும் இவர்கள் தான்.

யாராவது இவர்களைப்பற்றி எழுதத் துணிந்தாலோ கேள்வி கேட்க முற்பட்டாலோ புலிப்பாசிஸம் அல்லது தனி மனிதத் தாக்குதல் என்று கூறி நழுவிக்கொள்வார்கள். இவர்களை நம்பினால் ஈழமக்களின் தலையெழுத்தை அந்த ஆண்டவனால்க் கூட காப்பாற்ற முடியாது.

Friday, March 13, 2009

ஆடு புலி ஆட்டம்


மல்லாக்காகப் படுத்திருந்து ரிலாக்ஸாக யோசித்ததில் (சீரியஸாக யோசித்து யோசித்து மூளை சூடேறிவிட்டது) ஆடு புலியாட்டத்தில் (நிஜப் புலிகளுடன் அல்ல) நாமும் கலந்து கொள்வோம் என்று தோன்றியது.

குட்டையைக்குழப்புவதுதானே நம்ம வேலையாச்சே... வந்தா மலை போனா என்னவோன்னு சொல்லுவாங்களே ..அதைப்போல ..

கொஞ்சம் பதிவுகளைப்படித்ததாலும் கொஞ்சம் பதிவுகளுக்கு வந்திருந்த பதில்கள் பாதித்ததாலும்.

என்ன சொல்லப்போறேன் என்பற்கு முன்னால் ... ரூடோ (rooto) ஒரு கேள்வி கேட்டிருந்தார் லசந்த விக்கிரம துங்கவைக் கொன்றது யார்னு?

நல்ல கேள்வி. பதிலும் எல்லோருக்கும் தெரிந்தது தான். அதை அவர் தன் நண்பருக்கு எழுதியிருந்ததை " கலையகம் " http://kalaiy.blogspot.com/2009/03/blog-post_4191.html

இப்படிப் போட்டிருக்கார்.

"எனது மரணம் சம்பவித்த உடனேயே நீங்கள் (ஜனாதிபதி ராஜபக்ஷ) வழக்கமான விசாரணைகளை தொடங்குவீர்கள். ஆனால் கடந்தகாலங்களில் முடுக்கிவிடப்பட்ட அனைத்து விசாரணைகளையும் போல, இதிலும் எந்த ஒரு முடிவும் வரப்போவதில்லை. உண்மையைச் சொன்னால் எனது மரணத்திற்கு யார் காரணம் (அனேகமாக பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ) என்பது, நம் இருவருக்கும் தெரியும்."

லசந்தவின் நண்பர் மகிந்த என்பதைக்கண்டு பிடித்திருப்பீர்கள். லசந்தவின் மரணத்திற்காக கவலைப்படும் ரூடோவிற்க்காக இன்னுமொரு சாம்பிள். அதுவும் லசந்த சொன்னது தான்.


"பிரிவினைவாத பயங்கரவாதம் அழிக்கப்படுகையில், பயங்கரவாதத்தின் வேர்களை கண்டறிவது அவசியமானது. அதேநேரம் இலங்கை அரசானது இனப்பிரச்சினையை பயங்கரவாதமாகப் பார்க்காமல், வரலாற்று கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும். நாங்கள் அரசபயங்கரவாத்திற்கு எதிராகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறப்படுவதற்கும் எதிராக கிளர்ச்சியுற்றோம். அதே நேரம், உலகில் இலங்கை அரசு மட்டுமே தனது பிரசைகள் மீது குண்டு வீசுகிறது என்ற கொடூரத்தையும் பகிரங்கப் படுத்த வேண்டியவர்களாக உள்ளோம்."



அதே நேரம் அமெரிக்க ராஜாங்க அமைச்சரிணி கிளாரியம்மா மகிந்தவுடன் பறைஞ்சது பற்றி
மீனகம் (http://meenagam.net/me/?p=2614) போட்டிருக்கார்.

"இத்தொலைபேசி பேச்சுவார்த்தையின்போது பொதுமக்கள் பாதுகாப்பு முதன்மையானதென ஹிலாரி கிளின்ரன் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என ஹிலாரி குறிப்பிட்டுள்ளார் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில், இலங்கை விவகாரம் தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் ஹிலாரியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

சரி இனி விஷயத்துக்கு வருவோம். ஈழத்தில் நடப்பது இனவிடுதலைப்போராட்டம்னு நீங்களும் நாங்களும் குய்யோ முறையோன்னு கூக்குரல் இட்டுக்கிட்டிருக்கோம்.

நீ த்மிழ் ப்ளொட்டான்னு ஒருவர் கேக்குரார். புலியைக்காட்டி மக்களை அட்டெண்ட்ஸ் போட வைக்காதேன்னு இன்னொருவர் சொல்றார். பயங்கர வாதம் ஒழிக்கப்பட்ட பின்னர்னு லசந்தவும் கிளாரியும் பேசிக்கிராங்க.

லசந்த சொல்லுராரே இனப்பிரச்சினையை பயங்கரவாதனு பார்க்காம அப்பிடின்னு நீங்க கேட்கலாம். நம்ம மக்களுக்கு இருக்கும் பிரச்சினை இனப்பிரச்சினைன்னு அவர் ஏற்றுக்கொண்டாலும் புலிகளைப் பிரிவினைவாத பயங்கர வாதிகள்னு சொல்வதை கவனிக்கணும்.

அதாவது ஈழத்தமிழ் மக்களாகிய நாங்க நமக்குள்ளேயே பிரிவினைப்பட்டு பிரிச்சிப்பார்த்து பேதமைப்பட்டு சின்னச்சின்ன கும்பிகளா நிக்கிறோம்.

புலிகள் வாழ்கன்னு ஒரு கோஷம், புலிகள் ஒழிகன்னு ஒரு கோஷம் , புரட்சிகரம் பிழைப்புவாதம்னு டோலர்கள் ஒரு புறம் , முட்டையில மயிர் புடுங்கி அதிலயும் கோலம் போடுற சிறிரங்கசாமிகள் மறு புறம்.

தமிழர்கள் என்றால் புலிகள்தான்னு விதண்டாவாதம் புரிபவர்கள் ஒரு புறம் , புலிகளும் தமிழர்தான் தமிழர் எல்லாம் புலிகள் அல்ல என்பவர் மறு புறம்.

இப்டியே புரட்சி செய்து புரட்சி செய்து இன்றைக்கு நாயை விடக்கேவலமா நடு ரோட்டில அடிச்சிப்போட்டாலும் ஏன்னு கேட்க நாதியில்லாம ஒரு இனம்னா அது நாங்க தான்.

இந்தியா உதவி செய்யும்னு சொன்னவங்க இந்தியாவே வந்து அடிக்கும்போது எங்கே போனார்களோ தெரியவில்லை. ஒபாமாவும் கிளரிம்மாவும் வந்து கை கொடுப்பாங்கன்னு வெள்ளை மாளிகைக்குப் படையெடுத்தாங்க..

இப்ப அவங்களே படை கொண்டு வந்து புலிகள் தடுத்து வைத்திருக்கும் மக்களை மீட்கப்போகின்றார்களாம்.

புலிகள் ஒழியும் வரை காத்திருக்கிறார்கள் உலக நாடுகள். அவர்கள் தெளிவாக மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் ஏம்பா சொல்லிரேன்னு கேட்கலாம். சொல்லத் தோணியது .சொல்ல்லுகிறேன்.

எங்களைப்பற்றி யார் யாரோ பேசுகின்றார்கள். முடிவுகள் எடுக்கின்றார்கள். அன்று ராஜீவிலிருந்து இன்று கிளாரிம்மா வரை.

இதுவரை நாங்கள் செய்து வந்ததெல்லாம் சரியில்லை. அதுதான் இத்தனை பின்னடைவு. தன்னை நம்பாமல் தன் மக்களை நம்பாமல் ஆயுதத்தையும் அதிகாரத்தையும் நம்பியதால் வந்த பின்னடைவு.

தனக்கென்று தனி வழியமைக்காது வால் பிடித்ததால் வந்த பின்னடைவு.

உலக ஒழுங்கை உள்வாங்கி இராஜந்திரமில்லாது தான் தோன்றிப்போக்கில் போனதால் வந்த பின்னடைவு.

எல்லாவற்றிற்கும் மேலால் தன்னவனையே கருங்காலியென்று பிரித்து வைத்ததால் வந்த பின்னடைவு.

இவ்வளவு சொல்கின்றாயே நீயெங்கே என்றால் ஏதாவது ஒரு கும்பியில்.
கும்பிகள் ஒன்று சேர்ந்து மலையாகும் கனவுகளுடன்.

இழுத்தால் மலை போனால் ஏதோவொன்று.